கட்டுரை : இலவசங்கள் அவமானமா?

2023 கட்டுரைகள் பிப்ரவரி 1-15, 2023

– வி.சி.வில்வம்

தமிழர்கள் கல்வி பறிக்கப்பட்டு, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு, வருவாய் இன்றி வறுமையில் உழன்றனர். எல்லாம் தலையெழுத்து என்றும், வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகலாம் என்றும் வாழ்ந்திருந்தார்கள்!
தமிழர்களின் இந்த மோசமான வாழ்வுக்கு ஆரியம் காரணமாக இருந்து வந்தது! இதன் விளைவாக உருவானதே பார்ப்பனர் அல்லாதார் அமைப்பு! பார்ப்பனியத்துடன் முட்டி மோதி தமிழர்களை முன்னுக்கு கொண்டு வர நீதிக்கட்சி தொடங்கி திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரும் முடிவுக்கு வந்தனர்!

தமிழ்நாட்டிற்குப் பிழைக்க வந்த பார்ப்பனர்கள் கடவுள், மதம், ஜாதி போன்றவற்றை நம்மிடம் கொடுத்துவிட்டு கல்வி, வேலை வாய்ப்பு, சொகுசு வாழ்க்கையை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.
ஹிந்துக்கள், ஹிந்துக்கள் என அலறும் பார்ப்பனர்கள், இந்தியாவை ஆண்ட கிறிஸ்துவ, இஸ்லாமிய ஆட்சியாளர்களின் காலில் விழுந்து வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டனர்! தமிழர்கள் சொந்த மண்ணில் அடிமைகள் போல் வாழ்ந்தனர்.
தமிழர்களை முன்னுக்குக் கொண்டு வரும் முயற்சியில் தான் அவர்களுக்குச் சில
பொருளாதார உதவிகள் செய்யப்பட்டன. உதவிகள் என்றாலும் அது அவர்களின் உரிமை!

அந்த அடிப்படையில் தமிழர்கள் கல்வி பெற சில ஏற்பாடுகள் செய்யப்-பட்டன. எனினும் உடனடி-யாக அனைவரும் கல்வி கற்க வந்து விட்டார்களா? இல்லை.பசியோடு வாழும் எங்களால் எப்படி கல்வி கற்க முடியும் என்று கேட்டார்கள்? காரணம் புரிந்த ஆட்சியாளர்கள் வாருங்கள் மதியம் சாப்பாடு தருகிறோம் என்றார்கள்! புத்தகம் வாங்கப் பணம் இல்லையா? வாருங்கள் புத்தகம் தருகிறோம்! அதை எடுத்துவர பை தருகிறோம்! செருப்பு தருகிறோம், சீருடை தருகிறோம், மேற்படிப்புக்கு உதவித் தொகை தருகிறோம், பேருந்தில் இலவசப் பயணம் தருகிறோம், மிதிவண்டி தருகிறோம், மடிக்கணினி தருகிறோம்!…என்ன வேண்டுமானாலும் தருகிறோம்… தயவுசெய்து படியுங்கள்! படியுங்கள்!! எப்படி-யாவது படித்து நல்ல வேலைக்குச் சென்று, வாழ்வில் முன்னேறி விடுங்கள்!!! என வெறித்தனமாக உழைத்தார்கள் திராவிடர் தலைவர்கள்! பின்னர் இதுவே திராவிடர் கட்சிகளின் கொள்கையாகி, இன்று படித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் உயர்ந்துவிட்டது! உலகம் முழுவதும் தமிழர்கள் கொடி கட்டிப் பறக்கிறார்கள்!

திராவிடர் இயக்கங்கள் தமிழர்களை நல்ல நிலைக்கு உயர்த்திவிட்டதே என்கிற எரிச்சல் தான் நாளும், பொழுதும் பார்ப்பனர்களுக்கு! இதை நேரடியாக வெளிப்படுத்தினால் முகமூடி கிழிந்துவிடுமே என்பதால் தான், தமிழர்கள் சிலரை விலைக்கு வாங்கி வேலை வாங்குகிறார்கள்! திராவிட கட்சிகள் இலவசங்களை வழங்கி தமிழ்நாட்டைச் சீரழித்துவிட்டதாக கதறுகிறார்கள்.
இலவசங்கள் வாங்கி, அதையும் ஏமாற்றி வாங்கி, பரம்பரை, பரம்பரையாகப் பிழைத்து வரும் ஒரே இனம் பார்ப்பனர்கள் மட்டுமே! அவர்கள் தமிழ்நாட்டிற்குச் சொந்தக்காரர்களும் இல்லை; பிழைக்க வந்தவர்கள்!

தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்களுக்குச் சேவகம் செய்து, காட்டிக் கொடுத்து, பொய் பேசி, கடவுள், மூடநம்பிக்கை மூலம் பயமுறுத்தி ஆண்டாண்டு காலமாய் இலவச பிச்சை வாழ்க்கை வாழும் பார்ப்பனர்கள் குறித்து இந்தக் “கூலி’’ தமிழர்கள் வாய் திறப்பதில்லை! வங்கிகளில் பல ஆயிரம் கோடிகளைக் கடனாக வாங்கி, குறிப்பாக குஜராத்திகள் பல இலட்சம் கோடிகளை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்… அவர்கள் குறித்தும் இவர்கள் எதுவும் பேசுவதில்லை. பல தலைமுறைகளாக ஒடுக்கப்பட்டு, அடிமை
வாழ்வு வாழ்ந்த தமிழர்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சில வாய்ப்புகளைக் கொடுத்தால் சில உதவிகளைச் செய்தால் அவற்றை இலவசம் என்று கொச்சைப்படுத்துகிறார்கள்.

எல்லா காலங்களிலும் எட்டையப்பராய் சில தமிழர்கள் வாழ்ந்து வருவர். அவர்களால் நீடிக்க முடிந்ததும் இல்லை; நிலைத்திருக்க முடிந்ததும் இல்லை! எனவே, இந்த வெட்டிக் கூச்சலை, கூலிக் கூச்சலைப் புறந்தள்ளி, அரசு எளியோர் உயர்வுக்கான நலத்திட்டங்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும். நல அரசின் அடிப்படை அதுதான்.