ஊடகங்கள் உருவாக்கும் பொய்யான கருத்துத் திணிப்பை உடைத்து நொறுக்கிய குரேஷி! -ஆசிரியர் கி.வீரமணி

‘‘400-ன்னு சொல்றாங்க, மே கடைசி வரை காத்திருக்க அது 250 ஆகக் குறையும். ஜூன் முதல் வாரம் 175-200 ஆகும். நான் அரை டஜன் அல்போன்சா மாம்பழ விலையைச் சொன்னேன்.” இது, மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தனது ‘எக்ஸ்’ தளத்தில் செய்துள்ள பதிவு. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. (ஆர்.எஸ்.எஸ்.) அரசின் பத்தாண்டுகால மக்கள் விரோத, ஜனநாயக ஒழிப்பு, இந்திய அரசமைப்புச் சட்ட ஒழிப்பு ஆட்சி முடிவுக்கு வருவதுபற்றி இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வரும் […]

மேலும்....

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அய்ந்து ஆண்டுகளுக்குப் பின் இப்பொழுது அவசரமாகக் கொண்டு வந்தது ஏன்?

இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பலையை ஏற்படுத்தி, தொடர் போராட்டங்கள் காரணமாக கிடப்பில் போடப்பட்டிருந்த குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA2019) நடைமுறைக்கு வருவதாக 11.3.2024 மாலை இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான விதிமுறைகளை வெளியிட்டு, நடைமுறைக்கு வருவதற்கான அறிவிப்பையும் அரசிதழில் வெளியிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலிருந்தே கடும் கண்டனங்களையும், எதிர்ப்புப் போராட்டங்களையும் சந்தித்து வரும் இந்தச் சட்டத்தைத் தேர்தல் அறிவிக்கப்படவிருக்கும் இந்த நேரத்தில் திடீரென அமலுக்குக் கொண்டு வருவதற்கான காரணம் என்ன […]

மேலும்....

இந்தியா கூட்டணி சிதறாது ! பி.ஜே.பி.யை வீழ்த்தி பெரு வெற்றி பெறும் !

இந்தியா’ கூட்டணி சரியான திசையில் சென்று, ஜனநாயக மீட்புப் பணியில் வெற்றியின் உதயத்தை நோக்கிய பயணத்தைச் சரியான உத்வேகத்துடன் செய்து வருகிறது! சில ‘சருகுகள்’ அதில் உதிர்ந்தன; சில சுயநலமிகள் தங்களது இடத்தைத் தற்காலிகமாகவேனும் பாதுகாக்கும் பொருட்டு காவிகள் பக்கம் சாய்ந்து, அவர்களது ‘மயக்க பிஸ்கெட்டுகளுக்கு’ பலியானார்கள். எதிர்கட்சிக் கூட்டணியிலிருந்து இவ்வாறு சென்றதையும் அதனால் கூட்டணி முழுமையாய்ச் சிதையும் என்று மிக மகிழ்ச்சியோடு சொன்னவர்களுக்கும், எதிர்பார்த்தவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சி வருகிறது! தொடக்கத்தில் தமிழ்நாட்டின் ஒப்பற்ற முதலமைச்சர் – […]

மேலும்....

‘விஸ்வகர்மா யோஜனா’ என்பது ஜாதி அடிப்படையிலான குலத்தொழிலே! தமிழ்நாடு அரசு இதனை நிராகரிக்க வேண்டும்!

13.02.2024 ‘தினமலர்’ இதழில், ‘‘தமிழகத்தில், மத்திய அரசின், ‘விஸ்வகர்மா’ திட்டத்தை அமல்படுத்துமாறு, பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, அத்திட்டத்திற்கான வயது வரம்பை, 18-க்கு பதிலாக, 35 ஆக உயர்த்தி அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சிற்பி, தச்சர், பொற்கொல்லர் உட்பட, 18 பாரம்பரிய கைவினை கலைஞர்கள் பயன்பெற, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை, மத்திய அரசு, 2023 செப்டம்பரில் துவக்கியது. இத்திட்டத்தை, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயல்படுத்துகிறது. திட்டத்திற்கு […]

மேலும்....

மீண்டும் தமிழ் இயக்கம் வேண்டும்!

கலைஞர் அரும்பாடுபட்டு, தமிழ் மொழியை செம்மொழி என்று அதிகாரப்பூர்வமாக ஆக்கினார்கள். அதுதான், மற்ற வடமொழிக்கேகூட வழிகாட்டியது. ஒன்றிய அரசினுடைய, அதற்குரிய ஆணை வந்த பிறகுதான், சமஸ்கிருதத்திற்கு செம்மொழித் தகுதி வேண்டும் என்று சொன்னார்கள். அதற்குப் பிறகுதான் அந்த உணர்வே அவர்களுக்கு வந்தது. அதற்குப் பிறகு வேறு சிலர், எங்கள் மொழிக்கும் செம்மொழித் தகுதி வேண்டும் என்று கேட்டார்கள். உண்மை அப்படியிருக்க தொன்மையும், சிறப்பும் வாய்ந்த தமிழுக்கு நடப்பில் உரிய இடம் இருக்கிறதா? எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! […]

மேலும்....