புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ! – முனைவர் கடவூர் மணிமாறன்

நெருப்புவரிப் பாட்டெழுதி நிமிர்ந்து நின்றே நிலைகுலைந்த தமிழினத்தின் மீட்சி நாடிப் பெரும்புரட்சிக் கருத்தியலை விதைத்தார்! தந்தை பெரியாரின் சிந்தனைகள் தம்மை எல்லாம் எரிமலையாம் தீக்குழம்பில் இணைத்துத் தோய்த்தே இடர்நீக்கும் பகுத்தறிவு யாழை மீட்டித் திராவிடத்தின் மாண்பெல்லாம் வரலா றாக்கித் திருப்புமுனை பாட்டுலகில் மிளிரச் செய்தார்! ஆரியத்தின் சூழ்ச்சிகளைத் தமிழர் கூட்டம் அறிந்திடவே பண்ணிசைத்தார்! அடிமைப் போக்கை வீரியமாய்க் கனன்றெதிர்த்தார்; மதங்கள் சாதி வேண்டாத மூடநெறி மடமை வீழச் சீரியநற் சீர்திருத்தப் பாக்கள் மூலம் செம்மாந்த புரட்சியினை நடவு […]

மேலும்....

அண்ணல் அம்பேத்கர்! – முனைவர் கடவூர் மணிமாறன்

அய்யா பெரியார் அம்பேத்கர் இருவரும் மெய்யாய் நம்மவர் மேன்மை விழிகள்! சாதி மதங்கள் சார்பை நீக்கிய நீதித் துறையின் அடிப்படை மய்யம்! அரசியல் அமைப்புச் சட்டத் தந்தை; விரவிய இழிவினை வெகுண்டே எதிர்த்தவர்; ஒடுக்கப் பட்டோர் உயர்வை எய்திடத் துடித்தவர்! பற்பல தொண்டறம் புரிந்தவர்; பல்துறைக் கல்வியைப் பாங்குறக் கற்றவர்; அல்லும் பகலும் அயரா துழைத்த மானுட உரிமைக் காவலர்; ஆரியர் நாணிடக் களத்தில் முன்னே நின்றவர்! முன்னோர் தொழிலை மரபினர் எல்லாம் தன்தொழி லாகத் தலைமேற் […]

மேலும்....

பட்டுக்கோட்டை அழகிரி ! – முனைவர் கடவூர் மணிமாறன்

தன்மானப் பேரியக்க அஞ்சா நெஞ்சன் தளபதியாய் அந்நாளில் களத்தில் நின்ற மன்னுபுகழ்ப் பெரியாரின் தொண்டர், தோழர்! மாண்பார்ந்த திராவிடத்தின் கொள்கைக் குன்றம்! பன்னரிய இழிவெல்லாம் சுமக்கச் செய்து பாழ்படுத்தி இன்புற்ற பகைவர் கூட்ட வன்மத்தை கிழித்தெறிந்த பட்டுக்கோட்டை வல்லரிமா அழகிரியை மறக்கப் போமோ! பகுத்தறிவுப் போராளி! நாட்டின் மேனாள் படைமறவர் இவராவர்! நமது முன்னோர் வகுத்திட்ட நெறியாவும் நினைவு கூர்ந்தே வன்கொடிய ஆரியத்தை வீழ்த்து தற்கே மிகத்துணிவாய்ப் பழந்தமிழர் சால்பை யெல்லாம் மேன்மையுறப் பதித்திட்டார்! மக்கள் நெஞ்சில்! […]

மேலும்....

தொண்டறச் செம்மல் மணியம்மையார் ! – முனைவர் கடவூர் மணிமாறன்

பெரியாரின் அறிவியக்கத் தொண்டுக் கெல்லாம் பின்புலமாய் அடித்தளமாய்த் திகழ்ந்தார் அன்னை! அருங்கொள்கை உரம்பெற்றார்! தமக்குப் பின்னர் அய்யாவும் இவர்தலைமை முடிவைச் சொன்னார்! பெருமைமிகு பெற்றோரை இழந்தோர் தம்மைப் பேணிடவே நாகம்மை இல்லம் கண்டார்; விரிந்தமனம் கொண்டோராய் ஒடுக்கப் பட்டோர் விடுதலைக்குக் களம்நின்றே உழைக்க லானார்! மணியம்மை விளம்பரத்தை விரும்பார் வாழ்வில் மவுனத்தால் அவமானம் இகழ்ச்சி வென்றார் பிணிசூழ்ந்த சமுதாயக் கட்டு மானப் பின்னடைவை முறியடிக்கும் உறுதி பூண்டார்! துணிவோடு கேடுகளை, இழிவைச் சாடித் துணையான அய்யாவை உயிராய்க் […]

மேலும்....

அண்ணாவின் புகழ் வாழ்க!

– முனைவர் கடவூர் மணிமாறன் எண்ணத்தை எழுத்தாக்கிச் செயலில் காட்டி இன, மானத் திராவிடத்தின் புகழை நாட்டிக் கண்ணொத்த மாநிலத்தைத் தமிழ்நா டென்றே கருத்தியலால் மாற்றியவர்! காஞ்சி ஈன்ற அண்ணாவோ மாமேதை! பெரியார் தொண்டர்! அய்யாவின் பாசறையின் மறவர்! வேண்டும் கண்ணியத்தை, கடமையினை, கட்டுப் பாட்டைக் காத்திடவே உழைத்திட்ட அறிவுச் சொற்கோ! தென்னாட்டின் மாண்பினையே நாளும் காத்துத் திசைகாட்டும் கலங்கரையின் விளக்கம் ஆனார்! குன்றிலிட்ட விளக்கெனவே ஒளிர்ந்தார்! “காஞ்சி, குடிஅரசு, திராவிடநா டி”தழில் என்றும் பன்னரிய சிந்தனையை […]

மேலும்....