கவிஞர் கடவூர் மணிமாறனுக்குத் ‘தமிழ்ச்செம்மல்’ விருது

2023 மற்றவர்கள் ஜனவரி 16-31 ,2023

கவிஞர் கடவூர் மணிமாறன் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மரபுக் கவிதைகளை மட்டுமே எழுதி வருபவர். தனித்தமிழ் இயக்க உணர்வாளராகிய இவர் எண்பது நூல்களைப் படைத்துள்ளார். தமிழ்க் கல்லூரிகளில் முறையாக நான்காண்டுகள் பயின்று புலவர் பட்டம் பெற்றவர்.
இங்கிலாந்து, பெல்சியம், செருமனி பிரான்சு, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய அயல்நாடுகளுக்குச் சென்று அங்கெல்லாம் அருந்தமிழை முழங்கியவர்.
இருநூற்றுக்கும் மேற்பட்ட பன்னாட்டுக் கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளவர். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்டு வரும், பல வகுப்புகளுக்கான தமிழ்ப்பாட நூல்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இவரது தமிழ்த் தொண்டினைப் பாராட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள், 21.12.2022இல் “தமிழ்ச்செம்மல்’’ என்னும் விருதினை வழங்கிப் பெருமை சேர்த்துள்ளார். பாவலர் கடவூர் மணிமாறன் அவர்களின் நற்றமிழ்த் தொண்டு சிறந்திட நாமும் வாழ்த்தி மகிழ்வோம்.