உடல் நலம் : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பனங்கிழங்கு!

ஏப்ரல் 16-31,2021

நமது நாட்டில் அழிந்துகொண்டிருக்கும் மர வகைகளில் பனைமரம் முதலிடத்தில் உள்ளது.  பனைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய நுங்கு, பதநீர், கிழங்கு மற்றும் பழம் போன்றவை அதிக சுவையுடன் மனிதர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் செயல்படக்கூடியவை.

பனை மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு அதனை வெட்டாமல் மரத்திலேயே விட்டுவிட்டால் அந்த நுங்கு நன்றாகப் பழுத்து பனம்பழமாகி விடும். இந்தப் பனம் பழத்தின் கொட்டையை நிலத்தில் குழி தோண்டி அதில் புதைத்து வளர்த்து வந்தால் கிடைப்பதுதான் பனங்கிழங்கு.

மலக்கழிவை வெளியேற்ற இயலாமல் அதாவது மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும். மேலும் உடலுக்கு எதிர்ப்புச் சக்தியாகவும் செயல்பட்டு உடலைக் காக்கும்.

¨           உடல் இளைத்தவர்கள் பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடல் பருமனாகும்.

¨           உடலுக்கு குளிர்ச்சித்தன்மை மற்றும் உடலின் வலிமை அதிகரிக்கும்.

¨           பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள் உறுப்புகள் வலிமையாகும்.

¨           சர்க்கரை நோய், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 


 

 தெம்பு தரும் செம்பு!

செம்புப் பாத்திரத்தில் குடிநீர் வைத்துக் குடிப்பது உடலுக்கு நல்லது என இப்போது புதிதாகக் கண்டறியப்பட்டது போல் கூறப்படுகிறது. ஆனால், சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் ஏற்கெனவே இதுகுறித்து விளக்கப்பட்டுள்ளது.

செம்பு கலந்த நீரானது, எலும்பை உறுதி செய்யும் தன்மையைக் கொண்டது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதிக்கும் ரத்தசோகை பிரச்சினையின் வரவை கட்டுப்படுத்தும். குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் செம்புப் பாத்திரத்தில் ஊறிய தண்ணீரைக் குடிப்பதால், தாய்க்கும், பிறக்கப் போகும் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியம், உடல் வலிமை கிடைக்கும்.

நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய எவர்சில்வர் பாத்திரங்களை விடவும் செம்புப் பாத்திரங்கள்தான் சிறந்தவை. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பியும், உணவு சமைத்தும் பயன்படுத்தி வந்தால், விந்தணு உற்பத்தி அதிகமாகும்.

குடிநீரை நன்றாகக் காய்ச்சி ஆறவைத்து செம்புப் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம். இந்த தண்ணீரிலேயே சீரகம், துளசி, புதினா, ரோஜா இதழ் போன்ற மூலிகைகளை தினம் ஒன்றாகக் கலந்தும் குடிக்கலாம். உடலுக்குக் கூடுதல் நன்மை கிடைக்கும்.

தண்ணீரை செம்புப் பாத்திரத்தில் இரவே அல்லது குறைந்தது நான்கு மணி நேரமாவது சேமித்து வைப்பதால், செம்பில் இருந்து ஓர் இயல்பை நீர் பெறுகிறது. தாமிரத்தில் சிறப்பான ஆன்டி ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளதால்  புற்றுநோய் வளர விடாமல்  பாதுகாக்கிறது.

தாமிரத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளைப் போக்க சிறப்பாகச் செயல்படும். கூடுதல் அளவிலான தாமிரத்தால்,  சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான ரத்த ஓட்டம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *