வட்டி எனும் கொடுங்கோன்மை!

2023 டிசம்பர் 1-15, 2023 தொடர்கள்

கணக்கு வழக்குகளைப் பார்ப்பதற்கென தனித்துறையை உருவாக்குவோம். அதன் வாயிலாக, நாட்டின் வருவாய் என்ன, எவ்வளவு செலவாகியிருக்கிறது என்பன உள்ளிட்ட விவரங்களை, எந்த நேரத்திலும் அதிபர் அறிந்துகொள்ள முடியும். விதிவிலக்காக, நடப்புக் கணக்கையும் அதற்கு முந்தைய மாதத்தின் கணக்குகளையும் மட்டும் உடனே அறிந்துகொள்ள முடியாது.

அரசாங்க நிகழ்ச்சிகளை அதிபரே முன் நின்று சிறப்பிக்க வேண்டும் என்ற சம்பிரதாய நிலை நம் ஆட்சியில் இருக்காது. அது, அவருடைய விலைமதிப்பில்லாத நேரத்தை உறிஞ்சக்கூடிய காரியம். நம்முடைய ஆட்சியில் அது ஒழிக்கப்பட்டு, நாட்டில் இருக்கும் தலையாய விவகாரங்களில் கவனம் செலுத்தவும், தம் நேரடிக் கட்டுப்பாட்டில் அவற்றை வைத்திருக்கவும் அதிபருக்கு நேரம் மிச்சப்படுத்தித் தரப்படும். ஆட்சியாளரைச் சுற்றி மொய்த்துக் கொண்டிருக்கும் பந்தா பேர்வழிகளாலும் பகட்டு அரசியல்வாதிகளாலும் அவருடைய நேரம் வீணடிக்கப்படுவதும் தவிர்க்கப்படும். அவர்களிடையே அரசரின் அதிகாரம் சிறுசிறு பகுதிகளாகச் சிதற அனுமதிக்கக்கூடாது. அந்த அரசியல்வாதிகளுக்கு அவர்களுடைய நலன்களில்தான் அக்கறையே தவிர, நாட்டு மக்களின் பொது நன்மையில் கிடையாது.

உங்களுக்கு நன்றாகத் தெரிந்ததுதான், தங்க மதிப்பை அடிப்படையாகக் கொண்ட பரிவர்த்தனை தேசத்தை அழிவிற்கு இட்டுச் செல்லும். ஏனெனில், பணத்தின் தேவையை அதனால் நிறைவு செய்ய முடியாது. தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட பரிவர்த்தனையை எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவுக்கு இல்லாமல் ஆக்கிவிட்டோம். அரசாங்கத் தேவைகளுக்காகப் பணம் வழங்கப்படுவது தாமதப்படாமல் இருப்பதற்காக, பணத் தேவையின் அளவு, அதன் தவணைகள் உள்ளிட்டவை எல்லாம் ஆட்சியாளரின் நேரடி உத்தரவுகள் மூலம் செயல்படுத்தப்படும். மேலும், துறைகளுக்கிடையே நிதி ஒதுக்கீடு செய்வதில், அமைச்சகங்களால் ஏற்படும் பாரபட்சத்தையும் அது போக்கிவிடும். வரவு செலவுகளுக்கான பட்ஜெட்டுகள், ஒப்பீட்டு முறையில் சீராகப் பராமரிக்கப்படும். இதனால் வரவுக்கும் செலவுக்கும் இடைவெளி ஏற்பட்டுக் குழப்பம் உண்டாவதைத் தவிர்க்க முடியும்.

அதில், நாம் சுட்டிக்காட்ட வேண்டிய முதல் குறைபாடு பட்ஜெட் ஆரம்பத்தில் ஒரு வரைவு பட்ஜெட் போடப்பட்டாலும், ஆண்டுதோறும் அது வளர்ந்து கொண்டே செல்வதற்குக் காரணங்களாவன:

முதலில் போடப்பட்ட பட்ஜெட்டிற்கு ஏற்ப அந்த நிதியாண்டின் பாதிக் காலத்தைப் பெரும் சிரமத்துடன் கடத்துகிறார்கள். பிறகு பட்ஜெட் மறுசீரமைப்புச் செய்வதற்கான அவசியம் ஏற்பட்டு விட்டதாகக் கூறுகிறார்கள். அவ்வாறு செய்து 3 மாதங்கள் செலவு செய்வார்கள். அதன்பிறகு துணை பட்ஜெட்டுக்கு கோரிக்கை வைப்பார்கள். சராசரி பட்ஜெட்டிலிருந்து விலகி, ஆண்டுதோறும் 50 சதவிகித கூடுதல் செலவுகளை அதிகரித்து, 10 ஆண்டுகளில் மொத்த பட்ஜெட்டும் 3 மடங்காக ஊதி நீர்த்துவிடுகிறது. எங்கோ தொடங்கி எங்கோ முடியும் இந்த பட்ஜெட் முறைக்கு நாம் நன்றிக் கடன் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
ஒரு நாட்டிற்கு உள்ள கடன்கள்யாவும் அந்நாட்டின் பலவீனத்தையே குறிக்கிறது. ஆட்சியாளர்களின் தலைமேல் தொங்கும் கத்தியைப் போன்றதுதான் கடன். தேவைப்படும்

பணத்தை, தற்காலிக வரி மூலம் மக்களிடம் வசூலிப்பதை விட்டு விட்டு, நம் வங்கியாளர்களிடம் கடன் கேட்டு தங்கள் இரு கைகளையும் அகல நீட்டுகிறார்கள். அந்நியக் கடன்கள் இருக்கின்றனவே, அவை அட்டைப் பூச்சிகளைப் போன்றவை. ஒட்டிக்கொண்டால் அந்நாட்டின் உடலிலிருந்து அவற்றைப் பிரிக்கவே முடியாது. ஒன்று, அதுவாகவே விழவேண்டும் அல்லது அரசாங்கமே வலுக்கட்டாயமாக அதைப் பிய்த்து எறிய வேண்டும். ஆனால் நோய் அரசுகள் அதைப் பிய்த்து எறியப் போவதில்லை. மேலும் மேலும் தங்கள் உடலில் அட்டைப் பூச்சிகளை ஒட்டி வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இதனால் அந்த அரசாங்கங்கள் அதிக இரத்தப் போக்கால் தாமாகவே செத்து மடிவதைத் தவிர வேறு வழியில்லை.

வட்டி எனும் கொடுங்கோன்மை

கடன், குறிப்பாக வெளிநாட்டுக் கடன் என்பது அட்டைப் பூச்சியாக இல்லாவிடில் வேறு என்னவாக இருக்க முடியும்? வாங்கப்பட்ட தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அசலோடு சேர்த்து மறுபடியும் செலுத்த அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்று போடப்படும் ஒப்பந்தமே கடன். உதாரணத்திற்கு, ஒரு கடன்தாரர் தாம் கொடுக்கும் கடன் தொகைக்கு 5 சதவிகிதம் வட்டி கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இருபது ஆண்டுகளில் அவர் வாங்கிய கடனைப் போல் இன்னொரு மடங்கு கடன் தொகையை வட்டியாகச் செலுத்த வேண்டும். அதே கடனுக்காக, 40 ஆண்டுகளில் இருமடங்குத் தொகையை வட்டியாகச் செலுத்த வேண்டும். 60 ஆண்டுகளில் மூன்று மடங்கு. இவையெல்லாம் கடன் தொகை அடைக்கப்படாமல், அசல் தொகை அப்படியே இருக்கும் நிலையில் வசூலாகும் தொகையாகும். தம் கடனை அடைப்பதற்காக நாட்டு மக்களுக்குப் பல வகைகளிலும் வரிவிதித்து அவர்களின் கடைசி பைசாவையும் பிடுங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது. ஆனால் கடனை வாங்குவதற்கு முன்னரே அதே விஷயத்தைச் செய்திருந்தால், நாட்டின் தேவையைக் கூடுதல் வட்டி இல்லாமலேயே நிறைவேற்றியிருக்க முடியும் என்பது இந்தக் கணக்கிலிருந்து தெளிவாகவில்லையா?

வணிகப் பங்குகள் நம் அரசாங்கத்தால் வாங்கப்படும். தற்போதுள்ள நடைமுறைப்படி கடனாளியாக வட்டி செலுத்திக் கொண்டிருக்
கும் அரசாங்கம், லாபத்திற்குக் கடன் கொடுக்கக்கூடிய அரசாங்கமாக நம் ஆட்சிக் காலத்தில் மாற்றம் பெறும். நம்முடைய இந்தப் பொருளாதாரக் கொள்கைகளால் ஒட்டுண்ணி முறையில் லாபம் ஈட்டுதல், சோம்பேறித் தனமான வாழ்க்கை போன்றவை ஒழிக்கப்படும். தற்போது சுதந்திரவான்களாக கோயிம்கள் திரிகின்றபோது மேற்சொன்ன தீய நிலையில் அவர்கள் இருக்கலாம். அது நமக்கும் பயனளிக்கும். ஆனால், நம் ஆட்சியில் அவர்கள் அந்த நிலையில் இருக்க முடியாது.

நம்மிடமிருது கடனாக வாங்கப்படும் பணத்தை எவ்வாறு வட்டியுடன் திருப்பிச் செலுத்துகிறார்கள் என்பதை அவர்கள் சிந்திப்பதில்லையா? சொந்த நாட்டு மக்களிடமிருந்து வாங்கித்தானே? அப்படியென்றால், தங்கள் அரசாங்க பணத் தேவைக்காகக் கடன் வாங்குவதை விட்டுவிட்டு, மக்களிடமிருந்து முன்னரே அதைப் பெறுவதில் என்ன தடையிருக்க முடியும்? இதைவிட வேறு என்ன எளிமையான வழிமுறை இருக்க முடியும்? தெள்ளத்தெளிவாக, இது எதைக் காட்டுகிறது? அவர்களின் வளர்ச்சியற்ற சிந்தனை ஆற்றலுக்கும் அவர்கள் மூளை கால்நடைகளுக்கு ஒப்பானது என்பதற்கும் இது சான்றாக அமையவில்லையா?

(தொடரும்…)