எச்சரிக்கைத் தொடர் – மக்களின் கவனத்தை அரசியலிலிருந்து திருப்ப வேண்டும்!

2023 கட்டுரைகள் செப்டம்பர் 16-30, 2023 மற்றவர்கள்

(யூதர்கள் இரகசிய அறிக்கை)

“நம்முடைய நோக்கங்கள் நிறைவேறும் பொருட்டு, ஊடகங்கள் என்னும் படையை வழிநடத்த மிகுந்த அக்கறையும், நுணுக்கமான சிரத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் தலைமைப் பத்திரிகை அலுவலகம் ஒன்றை நிறுவி, அதில் இலக்கியச் சந்திப்புகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். சந்திப்பின் போது, மற்ற பத்திரிகை ஆசிரியர்கள் அறியா வண்ணம், அவர்களிடையே ஊடுருவியிருக்கும் நமது ஏஜெண்டுகள், அன்றைய நாளில் என்னனென்ன விவகாரங்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். விவாதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை மறைமுக சங்கேத மொழியால் உணர்த்துவார்கள்.

ஆலோசனை மற்றும் விவாதங்களின் போது, போலி தர்க்கவாதத் துறைகளைக் கையாண்டு தம் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஏஜெண்டுகள் பேசுவார்கள். எதிராளிகளிடம் நயவஞ்சகமாக விவாதித்து, நமக்கு ஆதரவு திரட்டுவார்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவதோடு நின்றுவிடாமல், பத்திரிகை
களோடு மேலதிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் நம் அரசாங்கத்தின் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தவும் இதுபோன்ற வழிமுறை நமக்குப் பேருதவியாக இருக்கும். வழக்கம்போல், நமக்கு நன்மை பயப்பதாக இருந்தால் மட்டுமே இந்த வழிமுறை கையாளப்படும் என்பதை உங்களுக்குச் சொல்லிகொள்கிறேன்.

நாமே, போலியாக ஏற்பாடு செய்து கொண்ட பத்திரிகைத் தாக்குதல்களால் நமக்கு மற்றொரு நன்மையும் இருக்கிறது. பேச்சுச் சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும், முழு அளவில் நடைமுறையில் இருப்பதாக மக்களை நம்ப வைக்க முடியும். இதன் மூலம், நமது உண்மையான எதிரிகள் வெறும் ஊழல்வாதிகள் என்று மக்களிடம் நிரூபிக்க நமது ஏஜெண்டுகளுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். நம் செயல்பாடுகளை எதிர்க்க, எதிரிகளுக்குச் சரியான அடித்தளம் இல்லாமல் ஆகிவிடும்.

பொய்களே செய்திகளாய் இதுபோன்ற வழிமுறைகள், தர்க்கவியல் ரீதியாகத் துல்லியமாகக் கணிக்கப்பட்ட ஒன்றாகும். இத்தகைய சிறப்புத் திட்டங்கள் மூலம், மக்களை அவர்கள் அறியாமலேயே அரசாங்கத்தின் பக்கம் வென்றெடுக்கலாம். மக்களின் கண்களுக்கு இந்தத் திரைமறைவு நடவடிக்கைகள் புலப்படாது. நிச்சயம், இந்த வழிமுறைகளுக்கு நாம் நன்றி செலுத்தக் கடன்பட்டுள்ளோம். தேவைக்கேற்ப, நமக்கு சாதகமான அரசியல் பிரச்சினைகளைத் தூண்டிவிடவோ, அமைதிப்படுத்தவோ, மேற்சொன்ன இவை உதவியாக இருக்கும். களநிலைமைக்குத் தக்கவாறு, உண்மைச் செய்திகளையோ, பொய்ச் செய்திகளையோ, அல்லது இரண்டையும் கலந்தோ, முரண்படுத்தியோ கொடுத்து பொது மக்களை நம் பக்கம் ஈர்க்கவும், குழப்பவும் நம்மால் முடியும். மக்கள் மனநிலைக்கு ஏற்றவாறான உத்திகள் நம்மால் கையாளப்படும்.

இவ்வாறாகச் செய்யும் போது, எதிரிகள் விஷயத்தில் நமக்கு வெற்றி உறுதியாகிவிடுகிறது. தமது எந்தக் கருத்தையும் முழுமையாக வெளிப்படுத்த முடியாத கையறு நிலையில், எதிரிகள் இருப்பார்கள். ஏனெனில் அதற்குத் தேவையான ஊடகம் அவர்களிடம் இருக்காது. அதற்குக் காரணம், மேற்சொன்ன திட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை நம் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். அவர்களுடைய எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் மேல்பூச்சாக அன்றி, முழுமையான மறுப்புரையை நாம் எழுதத் தேவையில்லை.

அதைத் தாண்டி பதில் தர வேண்டிய நிலை ஏற்பட்டாலும், நமது மூன்றாம் தர பத்திரிகைகள் வாயிலாக அந்தக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு, உடனடியாக முதல் மற்றும் இரண்டாம் தர ஊடகங்களால் மிக மிகச் சிறப்பான முறையில் அவை மறுக்கப்படும்.

நமது திட்டங்களுக்கு உகந்த கருத்துகளை நாட்டின் தலைநகரங்களைவிட, அது அல்லாத பிற பகுதிகளில் வாழும் மக்களிடையேதான் அதிகப் பரப்புரை செய்ய வேண்டும். நாம் எந்த நடவடிக்கை மேற்கொள்வதாக இருந்தாலும், அது பெரும்பான்மை மக்களின் எண்ணத்திற்கு ஏற்பவே செய்யப்படுகிறது என்று காட்ட வேண்டும். உண்மையில் அந்தக் கருத்துகளுக்கு மூலகாரணமாக நமது ஏஜெண்டுகளே இருப்பார்கள்.

ஏதேனும் ஒரு சட்டத்தை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டால், அதை நாம் நேரடியாகவும் உடனடியாகவும் செய்வதில்லை. மாறாக, நமது ஊடக ஏஜெண்டுகளிடம் கூறி, அந்த விவகாரத்தைப் பற்றிய விவாதத்தை முன்னெடுத்துச் செல்வோம். அதன் தொடர்ச்சியாக, புதிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பின்னர், அதை செய்து முடிக்கப்பட்ட காரியமாக மக்களிடம் சமர்ப்பிப்போம். நம் நடவடிக்கையை யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்கத் துணிய மாட்டார்கள்.

ஏனெனில், ஊடகம் உள்ளிட்ட சாதனங்களின் வழியாகச் செய்யப்பட்ட நீண்ட கதையாதலின் தொடர்ச்சியாகவே, புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டதாக மக்கள் நம்ப வைக்கப்படுவார்கள். குழப்பமான சூழ்நிலைக்குப் பரிகாரமாகவே புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதாக ஒரு தோற்றம் உருவாக்கப்படும். அதே சமயம், அடுத்தடுத்த பிரச்சினைகளைக் கிளப்பி மக்களைத் திசை திருப்பும் பணியையும் ஊடகங்கள் செய்யும்.

மக்களை முற்றிலுமாக அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்க, அவர்களை அதிலிருந்து திசை திருப்ப வேண்டும். அதற்காக, கேளிக்கைகள், விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்குகள், புதுப்புது ஆசைகள், சொகுசு வீடுகள் என என்னவெல்லாம் இருக்கின்றனவோ, அவற்றில் எல்லாம் அவர்களை ஈடுபடுத்தலாம். பல்வேறு விளையாட்டுகளிலும் கலை- நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள வருமாறு ஊடகங்கள் மூலம் மக்களைத் தூண்டிவிடலாம். இவ்வகையான விஷயங்கள், மக்களை நமக்கு எதிரான கேள்விகளிலிருந்து திசைதிருப்பும். விரைவிலேயே நாம் அதைச் செய்ய வேண்டும்.

நம் அரசாட்சி நிலைநாட்டப்பட்ட பிறகு, இந்த உலகில் நம் கடவுளின் மதத்தைத் தவிர, வேறு எந்த மதமும் இருக்கக் கூடாது. அவை நமக்கு உகந்ததல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக, கடவுள் நம்மை ஆக்கி வைத்திருக்கிறார். இந்த உலக மக்களின் தலைவிதியை நிர்மாணிக்கக்கூடிய அதிகாரத்தையும் கடவுள் நமக்கு வழங்கியிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு மதத்தைத் தவிர்த்து இருக்கின்ற இன்னபிற மத நம்பிக்கைகள் யாவும் துடைத்தெறியப்பட வேண்டும்.

அவ்வாறு செய்வது, நாத்திகர்களை உண்டு பண்ணும். ஆனால், அது ஒரு தற்காலிக நிலையாகத்தான் இருக்கும். அது நம் நோக்கத்திற்குத் தடைக்கல்லாக ஆகாது. மோஸஸ்(மூஸா) போதித்த இந்த விரிவான, நிலையான கொள்கையே இந்த உலக மக்களை நம் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தது. அதுவே, நம் மதம் எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பதற்கான ஆதாரமாக இருப்பதோடு, எதிர்கால சந்ததியினருக்கு ஓர் எச்சரிக்கையாகவும் அமையும்.

மக்களால் நாம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், நமக்கு எதிராகச் சிறு கிளர்ச்சிகூட நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. எனவே, இந்த பூமியில் நம் ஆட்சி அமைவதற்கு எதிராக யாரெல்லாம் ஆயுதம் ஏந்துகிறார்களோ, கொஞ்சமும் கருணையின்றி அவர்கள் நசுக்கி எறியப்பட வேண்டும். நமக்கு எதிராக, இரகசிய சங்கங்கள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். தற்போது நமக்குத் தெரிந்து இயங்கிக்கொண்டிருக்கும் மேசானிய சங்கங்கள் கலைக்கப்படும். நமக்கு உதவிக்கொண்டிருக்கும் கோய் மேசான்கள் அய்ரோப்பாவை விட்டும் தூரப் பிரதேசங்களுக்கு நாடு கடத்தப்படுவார்கள். நம்மைப் பற்றி அளவுக்கு அதிகமாக அறிந்து வைத்துள்ள கோய் மேசான்களிடம், இவ்வாறாகத்தான் நாம் நடந்துகொள்ள வேண்டும். சில காரணங்களுக்காக, நாம் அவர்களில் சிலரை மன்னிக்க நேர்ந்தாலும், எங்கே தம்மையும் நாடு கடத்திவிடுவார்களோ என்ற அச்சம் அவர்களை ஆட்கொண்டிருக்கும். நாம் இயற்றும் புதிய சட்டத்தின்படி, மேசானிய சங்க உறுப்பினர்கள் யாவரும் நமது ராஜ்யத்தின் மய்யப் பகுதியான அய்ரோப்பாவிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள்.

நமது அரசாங்கத்தின் முடிவே இறுதியானது. அதில் மேல்முறையீடு என்ற பேச்சுக்குச் சிறிதும் இடம் இல்லை.

நாம் கோயிம் சமூகங்களில் விதைத்துள்ள வேற்றுமை எண்ணத்தையும் ஒத்துழையாமை குணத்தையும் எப்படிச் சரிகட்டுவது-? வேறு வழி கிடையாது. நாம் எடுக்கும் கருணையற்ற நடவடிக்கைகள் மூலம்தான் அவற்றைச் சரிகட்ட முடியும். நம் அரசாங்கமே நேரடியாகத் தலையிட்டு அதைச் செய்ய வேண்டும். தண்டனைக்குள்ளாகும் குற்றவாளிகளுக்காக கொஞ்சமும் இரக்கமோ கவலையோ அடையக்கூடாது. ஏனெனில், எதிர்கால நன்மைக்காகவே அவ்வாறான கஷ்டங்களை அவர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். அரசாங்கம் என்பது வெறும் பெயரளவுக்கு மட்டும் இருக்கக் கூடாது. இதுபோன்ற சில தியாகங்களை மேற்கொண்டேனும் பொதுநலன் காப்பதே அரசாங்கத்தின் மீதிருக்கும் கடமையாகும். அரசாங்கத்தை அதுவே அர்த்தமுள்ளதாக்கும்.

மனிதர்கள் யாவரும் மரணத்தை ஒரு நாள் சுவைத்தே தீர வேண்டும். அதனால், நம் விவகாரங்களில் தலையிட்டு நமக்குத் தடை ஏற்படுத்துபவர்களின் மரணத் தேதியை முன்னரே குறித்து விடுவது நல்லது. ஏனெனில், இந்தத் திட்டத்தைத் தீட்டிய நம்மைவிட, அவர்கள் முந்திச் சாவதுதான் நல்லது. அதுதான் சரி! யாருக்கும் சந்தேகம் வராதபடி, நமக்கு எதிராகச் செயல்படும் மேசான்களைக் கொலை புரிவோம் அதுபற்றி, நம்மோடு நெருக்கமாக இருக்கும் சகோதரர்களுக்குத் தவிர, வேறு யாருக்கும் சந்தேகம் வராது. கொலை செய்யப்படுபவருக்குக் கூட, நம்மைக் குறித்த சந்தேகம் வரக்கூடாது. நமக்கு வேண்டிய பொழுது, அவர்கள் இயற்கையாகவே உடல்நலம் குன்றி உயிரிழப்பது போல் இறப்பார்கள். இதைப் பற்றி அறிகிற நம் சகோதரர்கள், நமக்கு எதிராகக் கலகம் செய்கிற மனவெழுச்சியைப் பெற மாட்டார்கள்.

(தொடரும்)