தமிழனே இது கேளாய்!

2023 தலையங்கம் நவம்பர் 1-15, 2023
தமிழா, தமிழா அடையாளம் உனக்கென்ன?
எண்ணிப் பார்த்தாயா?
ஆரியத்தின் அடி வருடியாய், அரசியலில் அவர்களால் ஏவி விடப்பட்ட ‘மாயமானாக’ ‘பி’ குழுவாக -_ கூலிப் பட்டாளமாய், விபீடண, சுக்ரீவ, அனுமார்களாகி சொந்த இனத்தை _ இன உரிமைகளை மாற்றார் காலடியில் வைத்து சுகம் அனுபவிக்கும் சோற்றால் அடித்த
பிண்டமா நீ ?
1. தீபாவளி,
2. வருஷப் பிறப்பு – 60 வருஷ ஆபாச கதை,
(ஒரு வருஷமும் தமிழ் இல்லா ஆண்டு )
3. சரஸ்வதி பூஜை,
4. விஜயதசமி,
5. கோகுலாஷ்டமி,
6. விநாயக சதுர்த்தி
7. ஸ்ரீராம நவமி
8. அட்சய திருதியை
9. மகிஷாசூர சம்ஹாரம்
இதில் ஒன்றாவது தமிழ், தமிழ்ப் பண்பாடு கொண்டதா? அவற்றிற்கு உகந்ததா?
கதை எல்லாம் அசுரர்களை_திராவிடர்களை அழித்ததையே மய்யமாகக் கொண்டவை.
கலப்பற்ற முந்தைய சங்க இலக்கியத்தில் இல்லாதவை.
உனது ‘யாழ்’ இன்று இல்லை!
அதனிடத்தில் ‘வீணை’ இடம்பெற்றது!
‘பாணர்கள்’ இல்லை, ‘சங்கீத வித்வான்கள்’ உள்ளே புகுந்தனர்!
தமிழ்ப் பாட்டு ‘துக்கடா’ _ – தீட்டு மொழியாம்… கோவிலில் வடமொழி சமஸ்கிருதம்.
உன் வீட்டு நிகழ்வுகளை தமிழில் நடத்தாமல் செத்த மொழி மூலம் வைத்து அதற்குக் கூலி தரும் – அறியாமை! அவலம்!
“வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்”
தமிழ் ‘நீஷ பாஷை’யாம். – இதை ஏற்றதால் மதி இழந்தாய், மானம் இழந்தாய்.
“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” என்றார் பெரியார் – ஓங்கி மண்டையிலடித்து, உனக்கோ இன்று மானமும் அறிவும் இல்லை என்று பிறர் கேலி செய்யும் கொடுமை கண்டு எம் நெஞ்சம் கொதிக்கிறது!
தமிழன் என்று கூறி இப்படி உன்னை விற்றுக் கொள்ளலாமா? பெயரில் தமிழன்; செயலில் மாற்றான் அடிமை. – யோசித்துப் பார்!
வீம்பு பேசி விலையை உயர்த்திக் கொள்வதுதான் உனது இன்றைய வீரமா?
புழுவாய் நீ எத்தனை நாளைக்கு?
பெரியார் கேட்கிறார் -_ திருந்து! திருந்து!!
– கி. வீரமணி
ஆசிரியர்