‘இந்தியா’ கூட்டணியின் வெற்றி தொடரட்டும்! முடியட்டும் பாசிச பா.ஜ.க. ஒன்றிய ஆட்சி! – தலையங்கம்

‘திராவிட மாடல்’ ஆட்சி என்ற ஒப்பற்ற ஆட்சியைத் தந்த, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் தந்தை பெரியாரின் கொள்கைப் பட்டறையில் பழுக்கக் காய்ச்சி வார்த்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். அய்யா, அண்ணா, கலைஞர் ஆகியவர்கள் வழிகாட்டும் நெறி என்ற முப்பாலையும் குடித்து வளர்ந்து தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு, கட்சி – ஆட்சி என்ற இரட்டைக் குதிரைகளையும் கட்டி – இந்தியாவும் – உலகமும் மெச்சத்தகுந்த கொள்கை ஆட்சி நடத்தி வரலாறு படைத்து வருகிறார் நமது மானமிகு மாண்புமிகு முத்துவேல் […]

மேலும்....

இந்தியா கூட்டணி சிதறாது ! பி.ஜே.பி.யை வீழ்த்தி பெரு வெற்றி பெறும் !

இந்தியா’ கூட்டணி சரியான திசையில் சென்று, ஜனநாயக மீட்புப் பணியில் வெற்றியின் உதயத்தை நோக்கிய பயணத்தைச் சரியான உத்வேகத்துடன் செய்து வருகிறது! சில ‘சருகுகள்’ அதில் உதிர்ந்தன; சில சுயநலமிகள் தங்களது இடத்தைத் தற்காலிகமாகவேனும் பாதுகாக்கும் பொருட்டு காவிகள் பக்கம் சாய்ந்து, அவர்களது ‘மயக்க பிஸ்கெட்டுகளுக்கு’ பலியானார்கள். எதிர்கட்சிக் கூட்டணியிலிருந்து இவ்வாறு சென்றதையும் அதனால் கூட்டணி முழுமையாய்ச் சிதையும் என்று மிக மகிழ்ச்சியோடு சொன்னவர்களுக்கும், எதிர்பார்த்தவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சி வருகிறது! தொடக்கத்தில் தமிழ்நாட்டின் ஒப்பற்ற முதலமைச்சர் – […]

மேலும்....

இந்து ராஜ்ய கனவை இந்தியா கூட்டணி தகர்க்க வேண்டும்!

‘மலர வேண்டும் ராமராஜ்ஜியம்’ என்ற தலைப்பில் 23-1-2024 தேதியிட்ட ‘தினமணி’ நாளேடு தலையங்கம் தீட்டி மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளது! ‘‘கோலாகலமாக நடந்தேறியிருக்கிறது; அயோத்தி ஸ்ரீராமர் கோவில் பிராண பிரதிஷ்டை ஒட்டுமொத்த இந்தியாவும் விழாக்கோலம் பூண்டது என்றுதான் சொல்லவேண்டும். இதைக் கருப்பு தினமாக அனுசரிக்கிறோம் என்கின்ற சிலரின் செயல்பாடு, பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாகக் கருதும் அசட்டுத்தனம் என்பதல்லாமல் வேறென்ன” என்று ‘குசலேயாசனி’ பாடி மகிழ்கின்றன ‘தினமணியும்’ அதன் வழியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். காவிக் கூட்டமும். […]

மேலும்....