அயோத்தி தாச பண்டிதர் ! – முனைவர் கடவூர் மணிமாறன்
உயரிய குறிக்கோள், கொள்கை உடையார் அயோத்தி தாச பண்டிதர்; போற்றும் ஆய்வு நாட்டம் அறிந்த மருத்துவர் ஓய்வே இன்றி இனநலன் காத்தவர்; சுயமரி யாதை உணர்வை ஊட்டிய நயத்தகு எழுச்சி மறவர்! நாட்டில் இந்து மதத்தைச் சார்ந்த மொழியாம் இந்தியோ பொதுமொழி ஆகா என்றவர்! வேதப் புரட்டுகள் விதைத்து வந்தோர் ஆதிக் கத்தைத் தகர்க்கத் துணிந்தவர்! ஒடுக்கப் பட்டோர் உயர்நிலை எய்திடப் படிக்கப் பள்ளிகள் திறக்கவும் பள்ளியில் நண்பகல் உணவை நல்கவும் அந்நாள் எண்ணிய சிந்தனை யாளர்! […]
மேலும்....