இலக்கியத்தரம் மிக்க இணையிலா இரங்கலுரை – சிகரம்

1933ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு – சிறப்பான சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி இரவு 7:45 மணியளவில் நாகம்மையார் மரணமடைந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் வந்தனர். கையில் தடியுடன் வாசலில் நின்ற பெரியார் யாரும் அழக்கூடாது; அழுவதானால் உள்ளே போகக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். அடுத்த நாள் காலை நாகம்மையார் உடல் எரியூட்டப்பட்டது. அன்று மாலையே ஈ.வெ.ரா. பிரச்சாரத்திற்காக வெளியூர் சென்றுவிட்டார். அதனால் பாசம் இல்லையென்று பொருள் அல்ல. பகுத்தறிவு வழிச்சென்றார். […]

மேலும்....

தமிழ்த் தாத்தா தகுதி உ.வே.சா.விற்கு உள்ளதா ? – சிகரம்

வே.சாமிநாத அய்யர் உ.வே.சாமிநாத அய்யர் தமிழ் நூல்களையெல்லாம் தேடித் தேடி அலைந்து பதிப்பித்தார் என்று ஒரு பொய்யான செய்தியைப் பரப்பி, அதன் அடிப்படையில் அவரைத் ‘தமிழ்த் தாத்தா’ என்று பெருமைப்படுத்துகின்றனர். இவை உண்மையா? உண்மையில் தமிழில் உள்ள முதன்மையான நூல்களைப் பதிப்பித்தவர்கள் யார் என்பனவற்றை ஆதாரங்களோடு இங்குக் காண்போம். அவர் பதிப்பித்த பழந்தமிழ் இலக்கிய நூல்கள்: 1. சீவக சிந்தாமணி-1887 2. பத்துப்பாட்டு மூலமும் உரையும்- 1889 3. சிலப்பதிகாரம் – 1892 4. புறநானூறு- 1894 […]

மேலும்....

தடைகளை உடையுங்கள் ! தன் காலில் நில்லுங்கள் ! – சிகரம்

பெண்கள் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளவும், அடிமை மற்றும் ஆதிக்கத் தளையிலிருந்து விடுவித்துக் கொள்வதும், அவர்கள் தங்களது நிலையை, தகுதியை, அறிவை, படிப்பை உயர்த்திக்கொள்வதும் தற்சார்பு நிலையை அடைவதும் அவசியம். சார்ந்தே வாழ வேண்டும் என்ற நிலைதான் ஒருவரை மற்றவருக்கு அடிமையாக்குகிறது. அந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தித்தான் ஆதிக்கம் செலுத்துகின்றவர்களும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். எனவே, சுயமாகச் சம்பாதிக்கின்ற தகுதியை, வாய்ப்பைப் பெண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உயர்கல்வி படித்த பெண்கள் கூட, திருமணமானவுடன் தனது தகுதிகள் அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு […]

மேலும்....

இந்த வள்ளுவருக்கா காவி ? – சிகரம்

தமிழர்கள் மட்டுமே வாழ்ந்த இந்த பரந்த நிலப்பரப்பில் ஆரியர்கள் அண்டிப் பிழைக்க நுழைந்தார்கள். முதலில் தமிழர்களிடம் பிச்சையெடுத்துப் பிழைத்தார்கள். பின் சடங்கு செய்து அதற்குத் தட்சணை பெற்றுப் பிழைத்தார்கள். ஆக, அவர்கள் உழைத்துப் பிழைத்தவர்கள் அல்ல. அதேபோல், தமிழர்களிடமிருந்து எல்லாவற்றையும் அவர்கள் கைப்பற்றி, திரித்து, மாற்றி, தனதாக்கிக் கொண்டார்கள். அவர்களுடைய இந்தக் கைப்பற்றும் முயற்சி இன்றளவும் நடந்துவருகிறது. முதலில் தமிழர் நிலத்தைக் கைப்பற்றினர், பின்பு தமிழ் மொழியைக் களவாடிச் சமஸ்கிருதத்தை உருவாக்கினர்; தமிழ்மொழியைச் சிதைத்தனர். அடுத்து நம் […]

மேலும்....

எரிமலை வெடிப்பா ? எரிதழல் சிவனா ?

… சிகரம் … திருவண்ணாமலை என்றாலே ‘தீபம்’ எல்லோர் நினைவிற்கும் வரும். அந்தத் தீபத்திற்கு ஒரு புராணக் கதை உண்டு. சிவன் அந்த இடத்தில் (திருவண்ணாமலையுள்ள இடத்தில்) பூமிக்கும் வானத்துக்குமாய் நெருப்பு வடிவில் நின்றார். அதனாலே அது நெருப்பு மலையாயிற்று. நெருப்பாய் நின்ற சிவனின் முடியைக் காண பிரம்மாவும், அடியைக் காண விஷ்ணுவும் முறையே அன்னப் பறவையாகவும், பன்றியாகவும் உருமாறி முயன்று தோற்றனர் என்பதே அப்புராணம். அவ்வாறு சிவன் எரிதழலாய் நின்றதன் அடையாளமாகத்தான் ஒவ்வோர் ஆண்டும் மலையின் […]

மேலும்....