கவிதை: நாடுய்யக் காண்போம் நாமே!

முனைவர் கடவூர் மணிமாறன் அதிகார வாய்ப்பாலே வரம்பு மீறி ஆணவத்தின் உச்சத்தில் அமர்ந்து கொண்டு குதிக்கிறது குள்ளநரிக் கூட்டம்! மூடக் குழிக்குள்ளே வீழ்ந்தோரோ எழவே மாட்டார்! புதிராக இருக்கிறது; தமிழ்நா டென்றே புகன்றிடவே கூடாதாம்; முகவர் கூற்றை மதியுள்ளோர் ஏற்பாரோ? சட்டம் தன்னை மதிக்காதார் இழைப்பதுவும் மானக் கேடே! எப்படியும் வென்றிடவே வேண்டும் என்னும் எண்ணத்தில் பொழுதெல்லாம் இருப்போர், வீணே செப்பரிய ஏமாற்றுச் செயல்கள் தம்மில் சிறகினையே விரிக்கின்றார்; நாட்டு மக்கள் ஒப்போலை பறிப்பதிலே முனைப்புக் கொள்வார்! […]

மேலும்....

கவிதை

பொங்கல் நாள் உறுதி ஏற்போம்! -முனைவர் கடவூர் மணிமாறன் பூந்தமிழர் எல்லாரும் உணர்வு பொங்கப் பூரிப்பாய்க் கொண்டாடும் திருநாள் பொங்கல்! ஏந்துபுகழ் வரலாற்றை நினைவு கூர்ந்தே ஏற்றத்தை விழைகின்ற இனிய நாளாம்! தீந்தமிழை மரபார்ந்த தமிழி னத்தின் தேன்கனவை நெஞ்சத்தில் தேக்கும் நாளில் மாந்தநேய நல்லுணர்வால் என்றும் வாழ்வில் மகிழ்ச்சியெலாம் வலம்வரவே உறுதி ஏற்போம்! தரணியெலாம் போற்றுகிற தமிழர் மாண்போ தனிச்சிறப்பாம்! செய்ந்நன்றி மறவாப் பண்பால் உரத்தநறுஞ் சிந்தனையால் உறவால் நட்பால் ஒப்பரிய கவின்கலையால் புதுமை நோக்கால் […]

மேலும்....

கவிதை : கருத்தாளர் பெரியாரின் கண்ணின்மணி வாழ்க!

‘பெரியார் பேருரையாளர்’ அ. இறையன் வரலாறு காணாத விறலேறு பெரியாரின் வழிவந்த வீர மணியே! தரமார்ந்த புடமிட்ட தங்கமாய் உருப்பெற்ற தரணிபுகழ் சூழும் மணியே! அரவமெனச் சீறிவரும் ஆரியரின் படைநோக்கி அறைகூவும் ஆற்றல் மணியே! உரமாகி நீராகி உயரறிவுச் சோலையை உண்டாக்க உஞற்றும் மணியே! உய்வறியாத் தமிழர்தமை உய்விக்கும் ஒருகொள்கை உளங்கொண்ட உறுதி மணியே! மெய்நோத லுற்றாலும் மென்நகையால் அதைவென்று மேன்மேலும் ஒளிரும் மணியே! செய்யாமற் சொல்லுவோர் செறிகின்ற திருநாட்டில் செயலான்ற சீர்த்தி மணியே! அய்யாவின் மெய்யியலை […]

மேலும்....

கவிதை: திராவிட ஒளிச்சுடர்

தீந்தமிழ்போல் வாழ்க! முனைவர் கடவூர் மணிமாறன் அய்யா பெரியார் செதுக்கிய சிற்பம் மெய்யாய்த் தமிழர் மேன்மைக் குழைப்பவர்! அருங்குணச் சான்றோர்; ஆற்றல் சுரங்கம்; பெருமைக் குரிய தமிழர் தலைவர் பெயருக் கேற்ப வீரம் மிக்கவர்! அயர்வே இல்லா அஞ்சா நெஞ்சினர்; ஓடும் குருதியில் உணர்வில் செயலில் பீடுறு திராவிடம் பிறங்கும் ஒளிச்சுடர்! பெரியார் பள்ளியில் பிழையறப் பயின்றவர் அரிய திறமெலாம் அவரிடம் கற்றவர்; சட்டம் பயின்றவர்; சால்பு மிக்கவர்; பெட்புற மனத்தில் பெரியார் கொள்கை இருத்திய அரிமா; […]

மேலும்....

கவிதை :அயல்மொழித் திணிப்பு ஆணவ உச்சம்!

முனைவர் கடவூர் மணிமாறன் இந்தியைத் திணிக்கத் துடிக்கின்றார் – மக்களை ஏய்த்தே நாளும் நடிக்கின்றார்! மந்தியை மானெனப் புகழ்கின்றார் பிறர் மனத்தை வருத்தி இகழ்கின்றார்! ஆங்கிலம் அகற்றிட விழைகின்றார் – இந்தியை அந்த இடத்தில் நுழைக்கின்றார்! தீங்கின் உருவாய்த் திகழ்கின்றார் – அறிவுத் தெளிவை இழந்தே மகிழ்கின்றார்! அரசியல் அமைப்புச் சட்டத்தின் – பல ஆணி வேரைப் பிடுங்குகிறார்; கரவை நெஞ்சில் சுமப்போரால் – மக்கள் கண்ணீர் சிந்தி நடுங்குகிறார்! உலகின் மூத்த முதன்மொழியாம் – நந்தம் […]

மேலும்....