இலக்கியத்தரம் மிக்க இணையிலா இரங்கலுரை – சிகரம்

1933ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு – சிறப்பான சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி இரவு 7:45 மணியளவில் நாகம்மையார் மரணமடைந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் வந்தனர். கையில் தடியுடன் வாசலில் நின்ற பெரியார் யாரும் அழக்கூடாது; அழுவதானால் உள்ளே போகக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். அடுத்த நாள் காலை நாகம்மையார் உடல் எரியூட்டப்பட்டது. அன்று மாலையே ஈ.வெ.ரா. பிரச்சாரத்திற்காக வெளியூர் சென்றுவிட்டார். அதனால் பாசம் இல்லையென்று பொருள் அல்ல. பகுத்தறிவு வழிச்சென்றார். […]

மேலும்....

என்னை உருவாக்கிய பெரியாரின் சிந்தனைகள்… – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

சென்ற இதழ் தொடர்ச்சி…. நிலவில் நீர் கண்டுபிடித்துவிட்டோம், நிலவில் எப்படி பத்திரமாக இறங்கலாம் என்றும் காண்பித்துவிட்டோம். இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மய்யத்தை ஏன் பூமியைச் சுற்றி அமைக்கவேண்டும்? நிலவிலேயே அமைத்தால் என்ன? அந்தக் கேள்விக்கான பதில் – சர்வதேச விண்வெளி மய்யம் பூமியைச் சுற்றி அமைக்கவேண்டிய அவசியமில்லை. நிலவில் அமைக்க முடியும். ஏனென்றால், பூமிக்கு அருகில் புதிய சர்வதேச விண்வெளி மய்யம் அமைத்தாலும், இன்னும் 10, 15 ஆண்டுகளில் அதனுடைய ஆயுட்காலமும் முடியும். ஆனால், நிலவில் […]

மேலும்....

இந்தியாவா ? பாரதமா ? – ஓர் ஆய்வு – பேராசிரியர் இரவிசங்கர் கண்ணபிரான் இணைப் பேராசிரியர், பாரிஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ்.

(‘திராவிடப் பொழில்’ அக்டோபர்  – டிசம்பர் 2023 ஆய்விதழில் “Names of the Nation – A Comparative Study’ என்னும் தலைப்பில் வெளிவந்த பாரிஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ்ப் பெயர்ப்பின் சுருக்கம். -தமிழ்ப் பெயர்ப்பு : பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம்.) சென்ற இதழ் தொடர்ச்சி… ஹத்திக்கும்பா கல்வெட்டு சொல்வதென்ன? இன்றைய ஒரிசா மாநிலத்தின் உதயகிரி மலைப்பகுதியில் பிராக்ருதி மொழியில் பிராமி எழுத்துருவால் வெட்டப்பட்டுள்ள ஹத்திக்கும்பா கல்வெட்டு, அந்தப் பகுதியைக் […]

மேலும்....

சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் சமூகநீதிச் சுடரை இந்தியா எங்கும் ஏற்றுவோம் ! – மஞ்சை வசந்தன்

1925 இந்திய வரலாற்றில் ஒரு முதன்மையான ஆண்டு. பலநூறு ஆண்டுகள் வேத, சாஸ்திரங்களின் அடிப்படையில் மக்களை வேறுபடுத்தி, கூறுபடுத்தி, உயர்வு தாழ்வு கற்பித்து, இழிவுபடுத்தி, தீண்டாமையைக் கடைப்பிடித்து வந்த நிலைக்கு எதிராய் புத்தர் காலத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. அந்த எழுச்சியும் புஷ்யமித்திரன் காலத்தில் முறியடிக்கப்பட்டு, மனுசாஸ்திரம் என்னும் மனித விரோத சாஸ்திரம் ஆரியர்களின் மேன்மைக்கும், ஆதிக்கத்திற்கும் உரிய வகையில் எழுதப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டது. இஸ்லாமியர் ஆட்சிக் காலத்திலும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் இந்நிலையே நீடித்தது. திருப்பாதிரிப்புலியூர் […]

மேலும்....

அரசு தரும் ஆயிரம் ரூபாய்க்கு மதிப்பு என்ன தெரியுமா? – திருப்பத்தூர் ம.கவிதா

ஊதியமில்லா உழைப்பை மட்டுமே தன் உடைமையாக்கிக் கொண்டு 50க்கும் 100க்கும் ஆண்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்த பெண்களையும், பக்கம் உள்ள கடைக்குப் போய் சிறு மளிகைச் செலவு வாங்கவும் சில்லரையின்றி அல்லல்பட்டிருந்த பெண்களையும், தான் பசியோடு இருக்கும் போதும் சிக்கனம் கருதி ஒரு பிஸ்கட் பாக்கெட் தன் குழந்தைக்கு மட்டும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் பெண்களையும் கேட்டால் தெரியும் – திராவிட மாடல் அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாயின் அருமை! கேட்டுத்தான் பார்ப்போமே… அய்ந்து ரூபாய் என்றாலும் […]

மேலும்....