அரசியலுக்கு வந்தது ஏன்? அண்ணா அறிவிப்பு!

2024 பெட்டி செய்திகள் மார்ச் 1-15, 2024

“என்னுடைய நண்பர்கள் எல்லாம், நான் பிரிந்து சென்று விட்டேன் என்று குறிப்பிட்டார்கள். இருக்க வேண்டிய கடினமான நாட்களில் இருந்தேன். பிரிந்தேன் என்பது கூட தவறு. இந்த நாடு, அரசியலை நமக்கு நேர் மாறான கருத்துடையவர்களிடம் கொடுத்து விட்டு அவர்களுக்கு நாம் ஆளாகி இருப்பதைப் போக்க வேண்டும் என்பதற்காக, அரசியலில் நுழைந்து அதனைக் கைப்பற்றியும் இருக்கிறேன். . . . . . இவரது கொள்கைகளை நிறைவேற்ற என்னால் இயன்றவரை பாடுபடுவேன். இந்த ஆட்சியால் பயனில்லை, எதுவும் செய்ய
இயலாது என்றால், ஒட்டிக் கொண்டிருப்பேன் என்று யாரும் கருத வேண்டாம். எனக்கு இப்பதவி இனிப்பானதல்ல !

– 12.07.1968 அன்று கரூரில் நடந்த தந்தை பெரியார் 89ஆம் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் அண்ணா பேசியது.