தொண்டறச் செம்மல் மணியம்மையார் ! – முனைவர் கடவூர் மணிமாறன்

பெரியாரின் அறிவியக்கத் தொண்டுக் கெல்லாம் பின்புலமாய் அடித்தளமாய்த் திகழ்ந்தார் அன்னை! அருங்கொள்கை உரம்பெற்றார்! தமக்குப் பின்னர் அய்யாவும் இவர்தலைமை முடிவைச் சொன்னார்! பெருமைமிகு பெற்றோரை இழந்தோர் தம்மைப் பேணிடவே நாகம்மை இல்லம் கண்டார்; விரிந்தமனம் கொண்டோராய் ஒடுக்கப் பட்டோர் விடுதலைக்குக் களம்நின்றே உழைக்க லானார்! மணியம்மை விளம்பரத்தை விரும்பார் வாழ்வில் மவுனத்தால் அவமானம் இகழ்ச்சி வென்றார் பிணிசூழ்ந்த சமுதாயக் கட்டு மானப் பின்னடைவை முறியடிக்கும் உறுதி பூண்டார்! துணிவோடு கேடுகளை, இழிவைச் சாடித் துணையான அய்யாவை உயிராய்க் […]

மேலும்....

அண்ணாவின் புகழ் வாழ்க!

– முனைவர் கடவூர் மணிமாறன் எண்ணத்தை எழுத்தாக்கிச் செயலில் காட்டி இன, மானத் திராவிடத்தின் புகழை நாட்டிக் கண்ணொத்த மாநிலத்தைத் தமிழ்நா டென்றே கருத்தியலால் மாற்றியவர்! காஞ்சி ஈன்ற அண்ணாவோ மாமேதை! பெரியார் தொண்டர்! அய்யாவின் பாசறையின் மறவர்! வேண்டும் கண்ணியத்தை, கடமையினை, கட்டுப் பாட்டைக் காத்திடவே உழைத்திட்ட அறிவுச் சொற்கோ! தென்னாட்டின் மாண்பினையே நாளும் காத்துத் திசைகாட்டும் கலங்கரையின் விளக்கம் ஆனார்! குன்றிலிட்ட விளக்கெனவே ஒளிர்ந்தார்! “காஞ்சி, குடிஅரசு, திராவிடநா டி”தழில் என்றும் பன்னரிய சிந்தனையை […]

மேலும்....

”நம்மினம் இங்கே ஒளிபெறட்டும் ”

கவிக்கோ அ. அரவரசன் தேவகோட்டை சுறவத்தின் முதல்நாளைச் சுடரோ னுக்குத் தொல்தமிழர் நன்றியினைச் செலுத்தும் நாளாய் அறம்சார்ந்த வினைப்படுத்தி விழாவெ டுத்தார்! அந்நாளே தமிழருக்குத் திருநாள் என்று நிறைமதியர் பகுத்தறிவுத் தந்தை யார்நம் நேர்மைதவழ் அறிவாசான் பெரியார் சொன்னார்! முறையான மெய்யியலின் தொடக்கம் தானே முகிழ்த்துவரும் நம்தமிழர் திருநாள் என்பேன்! பகலென்றும் இரவென்றும் பார்த்தி டாமல் பாடுபடும் உழவர்களின் மேன்மை போற்றி அகப்பாட்டும் புறப்பாட்டும் சொல்லி டாத அகவுணர்வின் நுட்பமுடன் அதனைப் போற்றி இகழுநரும் ஏற்கின்ற வகையாய் […]

மேலும்....

காடும் – கழனியும் ஏரும் – எருதும் காட்டிடும் பாடம் படிப்போம்!

பேரறிஞர் அண்ணாவின் பொங்கல் வாழ்த்து வாழ்த்துகின்றேன்! வாழ்த்துகின்றேன்! எத்துணை ஏழ்மை, ஏக்கம், துக்கம் ஈங்கிவை தாக்கிடினும், ஏற்புடைத் திருநாள் என்றுநாம் கொண்ட பொங்கற் புதுநாள் அன்று மட்டும் புதுப்புன லாடி புத்தாடை அணிந்து, பூரிப் புடனே விழாநடத் திடுவோம்! என்னையோ வெனில், உழைப்பின் உயர்வைப் போற்றிடும் பண்பு உலகெலாம் பரவிடல் வேண்டு மென்றே விழைவு மிகக் கொண்டோம் அதனால்! காய்கதிர்ச் செல்வனைப் போற்றினர், ஏனாம்? உயிர்கட்கு ஊட்டம் அளிப்பவ னதனால். உழவர்கள் உயர்வினைப் போற்றிடல் எதனால்? உண்டி […]

மேலும்....

பிரிவினையை வேரறுக்கப் பிறந்த பொங்கல்!

பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் புராணத்தின் பொய்க்கதைகள் பேசாப் பொங்கல்! புகழ்தமிழர் மரபினிமை பேசும் பொங்கல்! முரணாக மதப்பற்றைப் பாராப் பொங்கல்! மொழியால்நாம் தமிழரெனப் பார்க்கும் பொங்கல்! உரங்கூட்டா வேற்றுமைகள் பேணாப் பொங்கல்! உறவாய்த்தம் காளைகளைப் பேணும் பொங்கல்! உறவெல்லாம் ஒன்றுகூட வாய்க்கும் பொங்கல்! உலகாளும் ஆதவன்சீர் போற்றும் பொங்கல்! உழக்குவிதை நிலம்விதைத்துக் கதிர்வ ளர்த்தே உற்றபசி அற்றொடுங்க ஊட்டும் பொங்கல்! உழவர்களின் உன்னதத்தை உரைக்கும் பொங்கல்! உலகமுண்ண உழைப்பார்சீர் ஓதும் பொங்கல்! உலகுயிர்த்த உயிரெல்லாம் ஒக்கு […]

மேலும்....