எச்சரிக்கைத் தொடர் – 2 மக்களுக்கு உரிமையும் சுதந்திரமும்கூடாது! (யூதர்கள் இரகசிய அறிக்கை)

2023 கட்டுரைகள் மற்றவர்கள் ஜூன் 1-15, 2023

– மஞ்சை வசந்தன்

‘‘ஆலோசகர்களை நியமித்து அரசாங்கத்-திற்கு தவறான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற வகையில் அரசமைப்புகளை நிறுவ வேண்டும்.
முறையான சட்டங்களுக்கு தவறான விளக்கம் கொடுத்து, சட்டத்துறையை முடக்க வேண்டும்.’’ என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யூதர்களின் இந்த இரகசிய அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களையும் அப்படியே ஆர்.எஸ்.எஸ். பின்பற்றுவதையும், அதை அப்படியே பி.ஜே.பி. ஆட்சி செயல்படுத்து-வதையும் இங்கு ஒப்பிட்டு அறிந்துகொள்ள வேண்டும்.
எனவே, ஆரிய பார்ப்பன அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் வழிகாட்டிகள் யூதர்களே என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டால், ஆர்.எஸ்.எஸ்ஸும், பி.ஜே.பி.யும் எவ்வளவு பெரிய பயங்கரவாத அமைப்புகள், பாசிச மனித விரோத அமைப்புகள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆர்.எஸ்.எஸ்ஸின். இரகசிய அறிக்கை

யூதர்கள் செயல்பாடுகள், அறிக்கைகள் எல்லாம் எப்படி இரகசியமானவையாக இருந்தனவோ அதேபோல், ஆர்.எஸ்.எஸ். அறிக்கைகள், செயல்திட்டங்கள் எல்லாம் இரகசியமானவை.
யூதர்களின் இந்த இரகசிய அறிக்கை மேசானிய விடுதியிலிருந்து (அய்ரோப்பாவில் செயல்பட்ட இரகசிய சங்கம்) திருடப்பட்டது என்று நூலின் ஆசிரியர் செர்கி நிலஸ் தம்முடைய இரஷ்ய நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இதைப் போலவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இரகசிய அறிக்கைகளை வெளியிடும். அந்த அறிக்கைகள் அவர்களுக்குள் இரகசியக் சுற்றாகப் பகிரப்பட்டு, படிக்கப்படும். வெளிப்படைத் தன்மை என்பதே அறவே அற்ற இயக்கம் ஆர்.எஸ்.எஸ். என்பதன் அடையாளமே இது. இந்த இரகசிய அணுகுமுறையை ஆர்.எஸ்.எஸ். யூத அமைப்பிடமிருந்தே கற்றது.

மக்களைப் பற்றி யூதர்களின் மதிப்பீடு

யூத பயங்கரவாத அமைப்பு சமுதாய மக்களை மதிப்பீடு செய்துகொண்டு அதற்கேற்பத் தங்கள் செயல் திட்டங்களை வகுத்தனர். யூத பயங்கரவாதிகளின் மக்கள் பற்றிய மதிப்பீடு கீழ்க்கண்டவாறு இருந்தது.

“மக்களில் நல்லவர்களைவிட கெட்டவர்களும், தீயவர்களுமே அதிகம். எனவே, மக்களுக்கு அறிவூட்டி, அறநெறி சொல்லி, அறிவுபூர்வ விவாதங்கள் நடத்தி ஒழுங்குபடுத்தவோ, நம் கட்டுக்குள் வைக்கவோ முடியாது. மாறாக, அவர்களை அச்சுறுத்தி, அடக்கி, தண்டித்துதான் வழிக்குக் கொண்டுவர முடியும்.

எல்லா மக்களுக்கும் அதிகார ஆசையுண்டு.
வாய்ப்புக் கிடைத்தால் எல்லோரும் சர்வாதிகாரிகளாக ஆகிவிடுவர். சுயநலனுக்காக சமூக நலனைக் காவு கொடுக்கத் தயங்கமாட்டார்கள்.
இப்படிப்பட்ட மக்களை இதுவரை கட்டுப்படுத்தியதும், அவர்களை வழிநடத்தியதும் எது?

ஆதிகாலத்தில் அதிகார அமைப்பு தன் விருப்பப்படி அடக்கி ஆண்டது. பிறகு அதற்கான சட்டங்கள் வகுக்கப்பட்டன. அவை அடக்குமுறைச் சட்டங்களாகவே இருந்தன.

அரசியல் சுதந்திரம் என்பது வெறும் கற்பனை. ஆனால், அந்த அரசியல் சுதந்திரம் என்ற கருத்தை மக்களைக் கவர பெயரளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மக்களுக்கு முழுமையாகச் சுதந்திரம் அளிக்கும் எந்த அரசும் நிலைக்காது. மக்கள் மீதான தமது கட்டுப்பாட்டை அது மிக விரைவில் இழந்துவிடும். அதன் விளைவாய் அரசு அதிகாரம் வேறு அமைப்பின் கைக்கு மாறிவிடும்.

மக்களைக் கட்டுப்படுத்தத் தகுதியான ஆட்சியாளர் இல்லாவிட்டால் மக்களிடையே கருத்து மோதலும், குழுக்கள் மோதலும் உருவாகி, இன, மத, மொழி, பொருளாதாரம் போன்றவற்றின் அடிப்படையில் பிரிந்து நின்று ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வர். நாடே கலவர பூமியாகும். இதனால் அந்நாடே அழியும், அல்லது அயல்நாட்டவரால் கைப்பற்றப்படும்.

பேராசைகளாலும், மூடநம்பிக்கைகளாலும், முன்னோர் வழிமுறைகளாலும், மனக்கிளர்ச்சிகளாலும் மட்டுமே பெரும்பாலான மனிதர்களும், மக்கள் கூட்டங்களும் வழிநடத்தப்படுகின்றனர். அவர்கள் கட்சி, அமைப்பு என்று பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து தத்தமது பிரிவுகளின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருக்கின்றனர். மக்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும் எதன் அடிப்படையில் அமைந்திருக்கின்றன என்று பார்த்தோமேயானால், ஒன்று சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் உள்ளது அல்லது பெரும்பான்மை என்ற அடிப்படையில் இருக்கிறது. அரசியல் அறிவின்மையால், இவர்கள் எடுக்கும் சில முட்டாள்தனம் முடிவுகளே அரசின் அழிவிற்கும், எதற்கும் கட்டுப்படாத அராஜக கும்பல்களாக மக்கள் பிரிந்து போவதற்கு காரணமாக அமைகின்றன.

அரசியலுக்கும் நேர்மைக்கும் தொடர்பே கிடையாது. தார்மிக வழிமுறைகளின் அடிப்படையில் ஆட்சி நடத்தும் ஓர் ஆட்சியாளனை திறமையான அரசியல்வாதி என்று கூற முடியாது. ஆட்சி புரிய விரும்பும் ஒருவன், தந்திரங்களைக் கையாளவும் மக்களிடம் பாசாங்கு செய்து அவர்களை எந்த முறையில் நம்ப வைக்க வேண்டுமோ அந்த முறையில் நம்ப வைக்கவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இருபெரும் உன்னதக் குணங்களாகக் கருதப்படும் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் அரசியலைப் பொறுத்தவரை தீண்டத்தகாதவை. பலம் வாய்ந்த எதிரியைவிட ஆபத்தான இவ்விரு பண்புகளே, அவர்களை ஆட்சிக்கட்டிலை விட்டு விரட்டப் போதுமானவை.
நமது வலிமையைப் பயன்படுத்துவதில்தான் நமது உரிமை அடங்கியிருக்கிறது. ‘உரிமை’ என்ற இந்தச் சொல், வரையறை செய்யப்படாத அருவமான சிந்தனை. இந்தச் சொல்லுக்கு உண்மையில் என்ன அர்த்தம் என்பது இதுவரை யாராலும் நிரூபிக்கப்படவில்லை.

‘உரிமை’ அது எங்கு தொடங்கி, எங்கு முடிகிறது?
எந்த நாடாக இருந்தாலும் சரி, அந்த நாட்டில் ஒழுங்கற்ற அரசாங்கம் இருப்பதற்கும், சட்டமும் ஆட்சியாளர்களும் தங்கள் உண்மையான மதிப்பை இழந்து போவதற்கும் காரணம் இந்த உரிமைகள்தாம்.
இவற்றின் மத்தியில் இருந்து நாம் ஒரு புதிய உரிமையைக் கண்டுபிடித்திருக்கிறோம். அது, பலம் வாய்ந்த நம்மவர்களின் போர் உரிமை. அதன்படி, தற்போது இருக்கும் அரசியல் அமைப்புகளையும் ஒழுங்கு முறைகளையும் தூள் தூளாக்கிக் காற்றில் பறக்க விடும் உரிமை. துறைகள் எல்லாவற்றையும் மறு சீரமைப்பதற்காக நமக்கு இருக்கும் உரிமை.

– தொடரும்