1400 குழந்தைகளுக்கு தன் பால் கொடை அளித்த கருணைத் தாய்!

2022 நவம்பர் 16-30 2022

தான் பெற்ற குழந்தைக்கே பால் கொடுத்தால் தன் கட்டுடல் கெட்டுவிடும், அழகு அழிந்துவிடும் என்று பாலூட்டுவதைத் தவிர்க்கும் தாய்மார்களுக்கிடையே 1400 குழந்தைகளுக்கு தன் பால் கொடையளித்த கருணைத்தாய் ‘சிந்து மோனிகா’. இதுதான் அவர் பெயர்.
இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். இவருக்கு ‘வெண்பா’ என்ற ஒன்பது மாதப் பெண் குழந்தை உள்ளது. சிந்து மோனிகா தன் குழந்தைக்கு ஊட்டியது போக மீதமுள்ள பாலை தமிழ்நாடு அரசின் பிறந்த குழந்தைகளின் தீவிரக் கண்காணிப்புப் பிரிவுக்கு (Neonatal Intensive care unit)  வழங்கினார். ஜூலை மாதம் 2021 முதல் ஏப்ரல் மாதம் 2022 வரையான ஏழு மாத காலத்தில் மொத்தம் (42) நாற்பத்திரண்டு லிட்டர் தாய்ப்பாலைவழங்கியுள்ளார்.
–_ செய்தி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
4.11.2022