கல்வி : ’நீட்’ தேர்வு கூடாது! ஏன்? நீளும் காரணங்கள்

நவம்பர் 01-15 2019

Medical Council of India (MCI) கணக்குப்படி இந்தியாவில் மருத்துவக் கல்லூரி இடங்கள்: 63,835.

இந்திய முழுவதும் கடை விரித்திருக்கும் Aakash Foundations என்னும் தனியார் பயிற்சி மய்யத்தில் மட்டும் பயிற்சி எடுத்து வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கை : 61,649.

அதாவது 63,835 மருத்துவக் கல்லூரி இடங்களில் 96% இடங்களை இந்த ஒரு தனியார் ‘நீட்’ பயிற்சி மய்யத்தில் பயின்ற மாணவ மாணவிகள் கைப்பற்றியிருக்கின்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களிடம் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்கள் மீது  எந்த விமர்சனமும் இல்லை.

இந்த Aakash Foundations என்னும் தனியார் பயிற்சி மய்யத்தில் கட்டணம் என்ன என்று பாருங்கள்…

Aakash – One year Regular Course for NEET:

INR 1,36,526

Aakash -Two Years Integrated Course for NEET: INR 3,33,350

Aakash – Crash Course for NEET: INR 32,804

நல்லா கண்கள் விரிய திறந்து பார்த்துக் கொள்ளுங்கள்.

+2 முடித்துவிட்டு விடுமுறையில் 1 மாதம் நடத்தக்கூடிய Crash Course Fees மட்டுமே INR 32,804.

குறைந்தபட்சம் ரூ.32,804/_- இருந்தால் மட்டுமே ‘நீட்’ தேர்வு பயிற்சிக்கு போய், படிச்சு, நீட் தேர்வு எழுதி பாஸாகி டாக்டர் ஆக முடியும்.

இதற்கும் இந்தியாவில் இருக்கும் CBSE, ICSE, State Board போன்ற எந்தவிதமான Syllabus–க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நன்னா விளங்கிக்கோங்க!

இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12-ஆம் இடமும் பெற்ற கீர்த்தனா படித்தது சென்னையின் பெரிய பள்ளிகளில் ஒன்றான PSBB. பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். CBSE Syllabus தான். ஆனாலும் கீர்த்தனா இந்த ஆண்டு +2 முடித்துவிட்டு  நேரடியாக நீட் தேர்வு எழுதி இந்த வெற்றியை அடையவில்லை. அவள் +2 முடித்த ஆண்டு 2016.

அதாவது சென்னையில் பெரிய பள்ளிகளில் ஒன்றான PSBB யில்,  CBSE Syllabus–ல் +2 முடித்த ஒருவர் 2 ஆண்டு தனியார் பயிற்சி மய்யத்தில் லட்சக்கணக்கான பணம் செலவு செய்து இந்த வெற்றியை அடைந்திருக்கிறார். அவருடைய பேட்டி இணையத்தில் இருக்கு. பேட்டியின் போது அவரை சுற்றி பயிற்சி மய்ய ஆசிரியர்கள் குழுமியுள்ளனர். அவர்கள் கழுத்தில் தொங்கும் ‘tணீரீ’களே அதற்கு சான்று.

இதனால்தான் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம்.

நம்ம தமிழ்நாட்டில்,

1. Madras Medical College

2. Stanley Medical College

3. Madurai Medical College

4. Thanjavur Medical College

5. Government Kilpauk Medical College

6. Chengalpattu Medical College

7. Kanyakumari – Government Medical College

8. Coimbatore Medical College

9. Tirunelveli Medical College

10. Salem – Mohan Kumaramangalam Medical College

11. IRT Perundurai Medical College

12. Trichy – K.A.P.Viswanatham Government Medical College

13. Thoothukudi – Government Medical College

14. Theni – Government Theni Medical College

15. Vellore – Government Vellore Medical College

16. Thiruvarur – Government Thiruvarur Medical College

17. Dharmapuri – Government Dharmapuri Medical College

18. Villupuram – Government Villupuram Medical College

19. Sivagangai – Government Sivagangai Medical College

20. Tiruvannamalai – Government Tiruvannamalai Medical College

21. Chennai – Oamndurar Government Medical College

22. Pudukkottai – Government Medical College

23. Annamalai University Rajah Muthaiah Medical College

என்று 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன.

இந்த 23 மருத்துவக் கல்லூரிகள் ஏதேனும் ஒன்றில்கூட MBBS படிக்க ஆண்டு கட்டணம் ரூ.32,804 கிடையாது.

ஆனால், Aakash Crash Course for NEET மட்டுமே ரூ.32,804/-. வித்தியாசத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அனிதாவும் பிரதீபாவும் இந்த 23 அரசு கல்லூரிகளில் இருந்த மருத்துவக் கல்லூரி இடங்களுக்குத்தான் போட்டியிட்டார்கள்.

அதற்கான தகுதியும் அவர்கள் இருவருக்கும் இருந்தது,

அனிதா 1175/1200

பிரதீபா 1125/1200

ஆனால், நீட் என்கிற ஒரு தடுப்பை வைத்து அவர்களைப் பரலோகம் அனுப்பியாச்சு.

நாங்களும் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான இந்த 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 2500+ இடங்களுக்கு மட்டுமே நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கிறோம்; போரூரில் இருக்கும் Sri Ramachandra Medical University  போன்ற தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அல்ல. தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு நிறைவேற்றிய நீட் விலக்கு சட்டமும் இதை தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

இதைத்தான் தரம் என்று நம் மீது திணித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பல தமிழக மாணவர்களின் குறிக்கோள் லட்சியம் பலியாக்கப்பட்டு வருகிறது.

இங்கு அவர்கள் நோக்கம் தரத்தைக் கொண்டு வருவதல்ல; பணக்காரர்களைத் தவிர வேறு யாரும் மருத்துவர் ஆகக் கூடாது என்பதுதான்!

ஏதோ தமிழ்நாடு மட்டுமே நீட் தேர்வை எதிர்ப்பதாக ஒரு பொய்யான பிம்பத்தை, காவி பக்தர்கள் கூட்டம் கட்டமைக்கிறது. இவர்களின் பிதாமகர் உத்தமசீலர் மோடியே குஜராத் முதல்வராக இருந்த போது நீட் தேர்வை எதிர்த்தவர்தான்.

முதல்வராக இருந்த காலத்தில் ஒன்றை எதிர்ப்பதும் பிரதமரான பின் அதை ஆதரிப்பதும் உத்தமசீலருக்கு ஒன்றும் புதிதல்ல.

‘ஆதார் அட்டை’, ‘ஜிஎஸ்டி’, ‘நீட்’ இது மூன்றுமே குஜராத் முதல்வராக அய்யா எதிர்த்து தான்.

எங்கள் வீட்டில் யாரும் 1200க்கு +2 தேர்வில் 1000 மதிப்பெண் தாண்டியதில்லை. அதனால் 1175 மதிப்பெண் வாங்கிய அனிதாவும், 1125 மதிப்பெண் வாங்கிய பிரதீபாவும் நமக்குப் பெரிதாகத் தெரிகிறார்கள். அந்தக் குழந்தைகளின் மரணங்கள் நமக்கு உயிர் வலியைத் தருகிறது. அதற்காக இந்தத் தேர்வு முறையை எதிர்க்கிறோம்.

பரம்பரை பரம்பரையாகக் கல்வியைத் தங்கள் குடும்பத்தின் ஓர் அங்கமாகக் கொண்டிருப்போர் களுக்கு இது சாதாரணமாகத் தெரிவதில் வியப்பேதுமில்லை. ஏனென்றால் 1200க்கு 1000 மதிப்பெண் என்பது அவர்களுக்குச் சர்வ சாதாரணம்.

Capitalism+Casteism=NEET ‘நீட்’ ஒரு நவீன தீண்டாமை! புரிந்துகொள்வீர்!

(நன்றி : கல்விக்குழு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *