வாசகர் மடல்

ஜுன் 1-15,2021

அய்யா,

வணக்கம். உண்மை மாதமிருமுறை இதழ் பிப்ரவரி 1-15, 2018இல் ‘அய்யாவின் அடிச்சுவட்டில்…’  புதுச்சேரி நிகழ்ச்சி படித்து மகிழ்ந்தேன். 03.07.1982 புதுச்சேரி மூலைக்குளத்தில் (புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலை) நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அந்தச் சிலை திறப்பு விழாவில் தாங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றினீர்கள். அந்நிகழ்ச்சியில் அவ்வழியாக வந்த காங்கிரஸ் பிரமுகர் தஞ்சை எத்தியராஜ் அவர்களும் உரையாற்றினார் என்பது சிறப்பான ஒன்று. மேலும் கல்வெட்டில் பெயர் எழுதப்பட்டுள்ளவர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தங்களின் மேலானப் பார்வைக்கு கல்வெட்டு நகல் இணைத்துள்ளேன்.

03.07.1982இல் மாணவர்களாகிய எங்களால் நிறுவப்பட்ட புதுச்சேரி மூலைக்குளம் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாக்குழுவினர் கால் நூற்றாண்டு கடந்ததின் நினைவாக கடந்த 03.07.2007இல் படம் எடுத்துக்கொண்ட காட்சியும் இத்துடன் இணைத்துள்ளேன். (இக்காட்சி படம் விடுதலையில் வந்துள்ளது). மீண்டும் சிலை புதுப்பிக்கப்பட்டு கம்பீரமாக நிறுவப்பட்டு கடந்த 23.09.2012இல் தங்கள் திருக்கரத்தால் மாலை அணிவிக்கப்பட்டது. இதையும் தங்கள் வரலாற்றுப் பதிவிட வேண்டுகிறேன்.

(கோ.மு.தமிழ்ச்செல்வன்)

(குறிப்பு: தங்களின் இக்குறிப்பு

நூலிலும் இடம்பெறும் – ஆசிரியர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *