புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மறைவு : 21.4.1964

‘‘வள்ளுவரைவிட புதுமையான புரட்சி யான கருத்துகளை- மக்களை பகுத்தறிவு வாதிகளாக்கக்கூடிய கவிதைகளை எழுதி யவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அவரது கவிதைகள் மனிதனை சிந்திக்கத் தூண்டுகின்றன. ஒவ்வொரு துறையிலும் சிறந்த கருத்துகளை நம்முடைய இயக்க முறையைவிட தீவிரமாகக் கூட எடுத்து விளக்கி இருக்கிறார். கடுகளவு அறிவுள்ளவன் கூட அவர் கவிதையைப் படித்தால் முழுப் பகுத்தறிவுவாதியாகிவிடுவான்.’’ – தந்தை பெரியார் (’விடுதலை’ 29.04.1971)

மேலும்....

அறிவுலக மேதை அம்பேத்கர் ! – தந்தை பெரியார்

காலஞ்சென்ற அறிவுலக மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 74ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு அளித்த இந்த விழாக் குழுவினர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இந்த விழா மிக்க சீரும் சிறப்புடனும் நடைபெற வேண்டிய விழாவாகும். தாழ்த்தப்பட்ட மக்கள் நலச் சங்கத்தினர் மட்டும் அல்லாமல் எல்லா மக்களாலும் கொண்டாடப்பட வேண்டிய விழாவாகும். இந்த விழாவிற்கு மக்கள் ஏராளமாகக் கூட வேண்டும். அம்பேத்கர் தொண்டின் பெருமையை எடுத்துக் கூற வேண்டும். அவரால் நாம் அடைந்துள்ள […]

மேலும்....

டாக்டர் அம்பேத்கர் பிறப்பு : 14.4.1891

இந்தியாவிலேயே மிகவும் துணிவு கொண்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் ஆவார். சமுதாயத்துறையில் இவரைப் போன்ற துணிவுடைய மற்றவரைக் கூற முடியாது. நமது கருத்தை எடுத்துக்கூறுவதில் எதிரிகள் பலம், மற்ற எதிர்ப்பு ஆகியவைகளுக்கு அஞ்சமாட்டார். அவரை நான் இந்தியாவின் பெர்னார்ட்ஷா என்றே கூறுவது உண்டு. – தந்தை பெரியார் (‘விடுதலை’ 26.06.1965)

மேலும்....