‘விஸ்வகர்மா யோஜனா’ என்பது ஜாதி அடிப்படையிலான குலத்தொழிலே! தமிழ்நாடு அரசு இதனை நிராகரிக்க வேண்டும்!

13.02.2024 ‘தினமலர்’ இதழில், ‘‘தமிழகத்தில், மத்திய அரசின், ‘விஸ்வகர்மா’ திட்டத்தை அமல்படுத்துமாறு, பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, அத்திட்டத்திற்கான வயது வரம்பை, 18-க்கு பதிலாக, 35 ஆக உயர்த்தி அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சிற்பி, தச்சர், பொற்கொல்லர் உட்பட, 18 பாரம்பரிய கைவினை கலைஞர்கள் பயன்பெற, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை, மத்திய அரசு, 2023 செப்டம்பரில் துவக்கியது. இத்திட்டத்தை, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயல்படுத்துகிறது. திட்டத்திற்கு […]

மேலும்....

இந்து ராஜ்ய கனவை இந்தியா கூட்டணி தகர்க்க வேண்டும்!

‘மலர வேண்டும் ராமராஜ்ஜியம்’ என்ற தலைப்பில் 23-1-2024 தேதியிட்ட ‘தினமணி’ நாளேடு தலையங்கம் தீட்டி மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளது! ‘‘கோலாகலமாக நடந்தேறியிருக்கிறது; அயோத்தி ஸ்ரீராமர் கோவில் பிராண பிரதிஷ்டை ஒட்டுமொத்த இந்தியாவும் விழாக்கோலம் பூண்டது என்றுதான் சொல்லவேண்டும். இதைக் கருப்பு தினமாக அனுசரிக்கிறோம் என்கின்ற சிலரின் செயல்பாடு, பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாகக் கருதும் அசட்டுத்தனம் என்பதல்லாமல் வேறென்ன” என்று ‘குசலேயாசனி’ பாடி மகிழ்கின்றன ‘தினமணியும்’ அதன் வழியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். காவிக் கூட்டமும். […]

மேலும்....

மீண்டும் தமிழ் இயக்கம் வேண்டும்!

கலைஞர் அரும்பாடுபட்டு, தமிழ் மொழியை செம்மொழி என்று அதிகாரப்பூர்வமாக ஆக்கினார்கள். அதுதான், மற்ற வடமொழிக்கேகூட வழிகாட்டியது. ஒன்றிய அரசினுடைய, அதற்குரிய ஆணை வந்த பிறகுதான், சமஸ்கிருதத்திற்கு செம்மொழித் தகுதி வேண்டும் என்று சொன்னார்கள். அதற்குப் பிறகுதான் அந்த உணர்வே அவர்களுக்கு வந்தது. அதற்குப் பிறகு வேறு சிலர், எங்கள் மொழிக்கும் செம்மொழித் தகுதி வேண்டும் என்று கேட்டார்கள். உண்மை அப்படியிருக்க தொன்மையும், சிறப்பும் வாய்ந்த தமிழுக்கு நடப்பில் உரிய இடம் இருக்கிறதா? எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! […]

மேலும்....

மக்களை நிரந்தர முட்டாளாக்கும் ஜோதிடப் பித்தலாட்டத்தை தொடர விடலாமா?

ஜோதிடம் என்பது புரட்டு; மகாபுரட்டு என்பது அன்றாடம் ஜோதிடத்தின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைக்கின்ற கூட்டத்தின் பொய்மை மூலம் நாள்தோறும் நடக்கும் சம்பவங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டு வந்தாலும்கூட, மீண்டும் தொடர்ந்து மக்கள் சூதாட்டத்தில் எப்படி மீண்டும் மீண்டும் ஏமாந்து இழப்புகளைச் சந்திக்கிறார்களோ, அப்படியே ஜோதிடத்திலும் தொடருவது மனிதனின் பகுத்தறிவுக்கும் தன் மதிப்புக்கும் எதிரானது; கேலியும் வெட்கமும் அடைய வேண்டிய அவமானமும்கூட! வானவியல் (Astronomy) என்பது அறிவியல் ; ஜோதிடம் (Astrology) என்பது போலி அறிவியல். அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் […]

மேலும்....

கூட்டணிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு ஜனநாயக முறையில் ஏற்றுக் கொண்டு சட்டமுன்வடிவு செயலாக்கத்தை நிறுத்திவைத்த முதலமைச்சருக்கு நன்றி!

கடந்த 21ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட தொழிலாளர்கள் பணி, உரிமைகள், சலுகைகளுக்கு எதிரான அம்சங்களைக் கொண்ட சட்ட முன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்ற அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் கோரிக்கையை ஜனநாயகப் பண்போடு நிறுத்தி வைத்த முதல் அமைச்சருக்குப் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரத்திலிருந்து, 12 மணி நேரம் உள்ளிட்ட, ஏற்கெனவே தொழிலாளர்களுக்கு என்று இருந்த உரிமைகள், சலுகைகள் பறிப்பு உள்ளிட்ட […]

மேலும்....