வாழைத் தோட்டம் சென்று வந்தோம்… – வழக்குரைஞர் துரை. அருண்

கண்டதாவது… “காலுக்கு செருப்புமில்லை கால் வயிற்றுக்கு கூழுமில்லை பாழுக்கு உழைத்தோமடா என்தோழனே பசையற்றுப் போனோமடா என் தோழனே” என்ற முதுபெரும் பொதுவுடைமை இயக்க தலைவர் ஜீவாவின் பாடலுக்கு ‘வாழை’ திரைக்காவியத்தில் பதவுரை எழுதி இருக்கிறார் மாரி செல்வராஜ். உழைப்பாளி மக்கள் அதிகார வர்க்கத்தால் எப்படி சுரண்டப்படுகிறார்கள் – அதற்கெதிரான தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் – வெறும் உடல் உழைப்பைச் செலுத்தும் உழைப்பாளிகள் இறுதிவரை வாழைத் தார் சுமக்கும் கூலிகளாகவே இருக்க நிர்பந்திப்பதும் – ஒரு தாருக்கு ஒரு […]

மேலும்....

வரவேற்கப்பட வேண்டிய “லாபட்டா லேடிஸ்!” திருப்பத்தூர் ம.கவிதா

ஒரு பெண் தன் ஏக்கங்களை தன் கணவனிடம்கூட வெளிப்படையாகப் பேசாமல் கமுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்; தன் கோபதாபங்களையும், சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் அழுத்தங்களையும் குடும்பத்திலோ பொதுவெளியிலோ உடைத்துப் பேசாமல் இருப்பது தான் நல்ல பெண்ணுக்கான அழகு!இப்படியாகிய குப்பைச் சிந்தனைகளைக் கூட்டிப் பெருக்கி தூரக் கொட்டி, தனக்கானதைத் தயக்கமற பெண்கள் உரக்கப் பேசுகிற காலம் தற்காலம்! முக்காடுக்குள் முகம் மறைத்து மூச்சு முட்டிக் கொண்டிருக்கும் வட இந்திய திருமணச் சடங்குகளின் கேலிக்கூத்து திறம்பட திரைப்படமாகி வெளிவந்திருப்பது தான் ”லாபட்டா […]

மேலும்....

சாமியார்களுக்கு எதிராக ஓர் ஊடகவியலாளரின் போராட்டம்…

மகராஜ் என்னும் ஹிந்துஸ்தானி மொழி திரைப்படம் இந்திய சமூகத்தில் இன்றும் நிலவிக்கொண்டு இருக்கும் – சாமியார்கள் மூலம் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் – தீமைகளுக்கு எதிரான பத்திரிகையாளரின் போராட்டம் பற்றிப் பேசும் திரைப்படம் ஆகும். குஜராத் பத்திரிகையாளர் சவுரப் ஷர்மா 2014ஆம் ஆண்டில் எழுதிய ‘மகாராஜ்’ எனும் நாவலைத் தழுவி இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கர்சன்தாஸ் எனும் பத்திரிகையாளர் முன்னெடுத்த சமூகச் சீர்திருத்த இயக்கச் செயல்பாடும் சமூகத்தில் நிலவும் தீமைகளுக்கு எதிரான அவருடைய முயற்சிகளும் திரையில் காட்டப் […]

மேலும்....

தகிக்கும் தாய்மனப் புழுக்கங்கள்!

… திருப்பத்தூர் ம.கவிதா … மனநலம் எவ்வழியோ அவ்வழியே உடல்நலம் என்பதை ஊரில் எத்தனை பேர் உணர்ந்தோம் என்பது விளங்கவில்லை! தலை வலி, வயிறு வலி என்று தனித்தனியே அந்தந்த மருத்துவர்களிடம் மருத்துவம் பார்க்க ஓடும் நாம், “எனக்கென்ன பைத்தியமா?” என்று வீம்பு காட்டாமல் மனநல மருத்துவர்களிடம் சென்று மனம் விட்டுப் பேசி தீர்வு காணுதலையும் இயல்பாக்கிக் கொள்ள வேண்டும். நிற்க, இப்போது சொல்ல வருவது இன்னொன்று! அதிகமாகப் படம் பார்க்கும் பழக்கம் இல்லாவிட்டாலும் ஆழமான தாக்கங்களை […]

மேலும்....

திரைப்பார்வை : உரிமைக் குரலை உரத்து முழங்கும் ‘ஜெய் பீம்’

சமா.இளவரசன் நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது ‘ஜெய் பீம்’. தீபாவளி அன்று திரையரங்குகளுக்கு வந்த திரைப்படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது இந்தப் படம் தான் என்றால் மிகையில்லை. படத்தின் முக்கியத்துவம் கருதி திராவிடர் கழகத் தலைவர் முதல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் வரை திரைப்படத்தைப் பார்த்துப் பாராட்டியிருக்கிறார்கள். வெளியான முதல் வாரம் பெரும் வரவேற்பையும், அடுத்த வாரம் விவாதங்களையும் குவித்தது ‘ஜெய் பீம்’.  இன்னும் கூட சிலர் இது […]

மேலும்....