பெண்களுக்காக உழைத்தவர்களில் ஈ.வெ.ரா.தான் உலகிலேயே முதலிடம் பெற்றவர். அந்த அளவிற்கு வேறு எவரும் சிந்தித்ததும் இல்லை. உழைத்ததும் இல்லை. இதை நன்குணர்ந்த பெண்கள், தங்களின் நன்றிப் பெருக்கால், 1938ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் நாள் சென்னை ஒற்றவாடைத் திரையரங்கில் நடைபெற்ற தமிழ்நாட்டு பெண்கள் மாநாட்டில் ‘பெரியார்’ என்ற பட்டத்தை அவருக்குத் தீர்மானம் நிறைவேற்றி வழங்கினர் என்பது உங்களுக்குத் தெரியுமா?