எச்சரிக்கைத் தொடர்

2023 கட்டுரைகள் மே-16-31,2023

இந்தியாவில் இலைமறை காயாக ஃபாசிசம்! எச்சரிக்கை!

ந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்டதே ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை உருவாக்கி, ஆரிய மேன்மையை மேலாண்மையை நிலை நிறுத்திக்கொள்ளவே. இவர்கள் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை உருவாக்க ஹிட்லரிடமிருந்தும், முசோலினியிடமிருந்தும் கொள்கைகளை, செயல்திட்டங்களைப் பெற்றனர்.

யூத பயங்கரவாதம் என்னென்ன நோக்கங்களை, கொள்கைகளை, செயல்திட்டங்களைக் கொண்டு செயல்பட்டதோ அதையே ஆர்.எஸ்.எஸ்ஸும், ஆட்சியிலுள்ள பி.ஜே.பியும் பின்பற்றிச் செயல்படுவதை ஒப்பிட்டு, உணர்த்தி, எச்சரிக்க இக்கட்டுரைத் தொடர். அனைவரும் ஆழ்ந்து படித்து, விழிப்பு பெறுவதோடு, பாசிச பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை அறவே அகற்ற, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அக்கறையுடன் உறுதிகொண்டு ஒன்றிணைந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம். தவறாது படியுங்கள், பகிருங்கள், பரப்புங்கள்.

உலக அளவில் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தி, யூத இனத்தவரை ஆதிக்க, அதிகார பீடத்தில் அமர்த்த இரகசியத் திட்டம் தீட்டப்பட்டது. அந்த இரகசியத் திட்டங்கள், ‘புரோட்டோகால்ஸ்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும், யூத பயங்கரவாதிகளின் இறுதி அறிக்கை என்று கூறப்படும் ‘Protocols of elders of the Zion’ என்னும் நூலாக, ரஷ்யாவைச் சேர்ந்த செர்கிநிலஸ் என்பவரால் இரஷ்ய மொழியில் 1905ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த இரகசிய அறிக்கையில் கூறப்படும் திட்டங்களை ஆர்.எஸ்.எஸ்ஸும், பி.ஜே.பி.யும் எப்படி அடி பிறழாமல் பின்பற்றித் தங்கள் செயல்திட்டங்களை வகுக்கின்றன என்பதை இனி ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

இலக்கு:

யூத பயங்கரவாதிகள் தங்கள் இலக்காக, அதை அடையும் வழியாகக் கீழ்க்கண்டவற்றைக் கூறுகிறார்கள்.
“சியோன் யூதர்களாகிய தாங்கள் கடவுளால் ஏற்கப்பட்ட (தேர்வு செய்யப்பட்ட) உயர்ந்த இனம், தாங்கள் அல்லாத பிற இனத்தவர்கள் கால்நடைகளுக்கு ஒப்பாவர். அவர்கள் ஆட்சி புரியத் தகுதியற்றவர்கள். தங்கள் நோக்கத்தை அடைய யூதர்கள் தப்பான, தீயவழிகளையும் பின்பற்றலாம். உலகில் கலவரங்களை, சீரழிவை, குழப்பத்தை, மோதல்களை உருவாக்கி அதன்மூலம் தாங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றலாம்’’ என்கின்றனர்.

1905இல் யூதர்கள் கூறிய இதே கருத்தை, 1925இல் ஆர்.எஸ்.எஸ். கொள்கைக் கர்த்தா கோல்வால்கர் அப்படியே அடிமாறாமல் கூறியுள்ளார்.
கோல்வால்கர் தமது ‘சிந்தனைக்கொத்து’ (Punch of Thoughts) என்னும் நூலில்,

“We (aryans) are the good, the enlightened people. We were the people who know about the laws of nature the law of the sprit. We had brought into actual life almost everything that was beneficial to mankin. Then the rest of humanity was just bipends and so no distinctive same was given to us. Sometimes in trying to distinguish our people from others, we were called the enlightened – the Aryas – and the rest the melachas.”

– (ஆதாரம்: Bunch of Thoughts)

அதாவது,

“நாம் (ஆரியர்கள்) நல்லவர்கள், அறிவுத்திறன் கொண்டவர்கள். இயற்கையின் விதிகளையும், ஆன்ம விதிகளையும் அறிந்தவர்கள் நாம்
தான். மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடியவற்றையெல்லாம் கொண்டு வந்தவர்களும் நாம்தான். அப்போது நம்மைத் தவிர மற்றவர்களெல்லாம் இரண்டு கால் பிராணிகளைப் போல் அறிவற்றவர்களாகவே இருந்தனர். எனவே, நமக்கென்று குறிப்பிட்ட பெயர் எதுவும் சூட்டப்படவில்லை. சில நேரங்களில் நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாம் அறிவுத்திறனுடைய ஆரியர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர மற்றவர்களெல்லாம் மிலேச்சர்கள் (இழிமக்கள்)’’ என்பதே கோல்வால்கர் கூறியது.

ஆரிய பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களையெல்லாம் ஆடு மாடுகளாக அதனினும் கீழாகக் கருதக் கூடியவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கூட்டத்தினர் என்பதும் ஆர்.எஸ்.எஸ். ஆரிய அமைப்பே என்பதும், இது உறுதி செய்கிறது.
மேற்கண்ட யூதர் கருத்துகளையும், ஆர்.எஸ்.எஸ். கருத்துகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். யூதர்களின் சர்வாதிகார, பாஸிச, ஆதிக்கக் கொள்கையை அப்படியே ஏற்றுக்கொண்டு, இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கியுள்ளனர் என்பது எள்ளளவும் அய்யமின்றி உறுதியாகும்.

அதுமட்டுமல்ல, யூதர்களின் கீழ்க்கண்ட செயல்திட்டங்களை இன்றைய பிஜே.பி., ஆர்.எஸ்.எஸ். செயல் திட்டங்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள். யூதர்களின் செயல் திட்டங்களை அப்படியே ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அமைப்புகள் பின்பற்றிச் செயல்படுவது தெளிவாய் விளங்கும்.

யூதர்களின் இரகசிய அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்கள்:

ஊடகங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, தங்கள் திட்டங்களுக்குத் தகுந்தாற்போல் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
இனம், மதம், வர்க்கம் ஆகியவற்றுக்கிடையே சண்டையை மூட்ட வேண்டும்.
லஞ்சம் கொடுத்தும், அச்சுறுத்தியும், ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் வழிக்குக் கொண்டுவர வேண்டும்.
பொம்மை அரசாங்கங்களை நிறுவி, நமக்குச் சாதகமானவர்களை ஆட்சியாளர்களாக நியமிக்க வேண்டும்.
மன்னராட்சியை ஜனநாயகம், கம்யூனிசம் உள்ளிட்டவற்றைக் கொண்டு இடமாற்றி இறுதியாக சர்வாதிகார ஆட்சியைச் செயல்படுத்த வேண்டும்.

மக்கள் உரிமையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்க வேண்டும்.
அறிவியலின் பெயரால் மதங்களை இல்லாதொழித்து, உலோகாயதத்தையும் நாத்திகத்தையும் பரப்ப வேண்டும்.
கல்வித்திட்டத்தைக் கட்டுப்படுத்தி, மக்களின் சிந்தனையை மழுங்கடிக்க வேண்டும்.
வரலாற்றைத் தம் வசதிக்கு ஏற்றாற்போல் திரித்து எழுத வேண்டும்.

பேராசை, சுகபோக வாழ்க்கை, பொழுதுபோக்கு ஆகியவற்றில் மக்களை மூழ்கடிக்க வேணடும்.
குடும்ப அமைப்பைச் சீர்குலைக்க வேண்டும்.
தீவிரவாதத்தின் பெயரால் மக்களைப் பயமுறுத்தி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
உலகளாவிய உளவு வலைகளைப் பின்ன வேண்டும்.
வறுமை எனும் சங்கிலியால் மக்களைப் பிணைக்க வேண்டும்.
மூலதனத்தில் ஏகபோகத்தை நிலைநாட்ட வேண்டும்.

செயற்கையான பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்த வேண்டும்.
பங்குச்சந்தையை ஊக்குவித்து, நேர்மையான தொழில்துறை வளர்ச்சியை நசுக்க வேண்டும்.
சிறு – குறு தொழில்களை நசுக்கி, பெருநிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்.
நீண்டகாலத் தவணை உடைய வெளிநாட்டுக் கடன்களைக் கொடுத்து நாட்டைச் சுரண்ட வேண்டும்.
வளர்ச்சி என்னும் வார்த்தை ஜாலத்தால் மக்களை ஏமாற்ற வேண்டும்.

(தொடரும்…)