வரலாற்றுச் சுவடுகள்

2022 செப்டம்பர் 1-15-2022 வரலாற்றுச் சுவடு

திராவிட இயக்கம் உருவாக்கப்பட்டபோது ஆரிய பார்ப்பனர் ஆதிக்க நிலை
ஸ்தல ஸ்தாபனப் பிரதிநிதிகள்
(உள்ளாட்சித் துறையிலிருந்து வந்தவர்கள்)
1. தென் ஆர்க்காடு _ செங்கற்பட்டு தொகுதி வழக்கறிஞர் R.சீனிவாச அய்யங்கார்
2. தஞ்சை _ திருச்சி தொகுதி _ திவான் பகதூர் V.K.இராமானுஜ ஆச்சாரியார்.
3. மதுரை _ இராமநாதபுரம் தொகுதி K.இராமையங்கார்
4. கோவை _ நீலகிரி தொகுதி C.வெங்கட்ட ரமணய்யங்கார்
5. சேலம் _ வட ஆர்க்காடு தொகுதி B.V. நரசிம்ம அய்யர்.
6. சென்னை நகர் _ சர் C.P. இராமசாமி அய்யர்.

டெல்லி, மத்திய சட்டசபையில் இடம் பெற்றவர்கள்
செங்கற்பட்டு மாவட்டம் _ வி.ரி.ஆச்சாரியார்.
சென்னை _ திவான் பகதூர் ஜி.ரங்காச்சாரி

உயர்நீதி மன்றத்தில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள்
S.சுப்பிரமணிய அய்யர்
V. கிருஷ்ணசாமி அய்யர்
T.V. சேஷகிரி அய்யர்
P.R. சுந்தரம் அய்யர்
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலே நாட்டில் இருந்த வழக்குரைஞர்கள், டாக்டர்கள், இன்ஜினியர்கள் நூற்றுக்கு தொண்ணூறு பேர் பார்ப்பனர்களே.
தமிழ்நாட்டில் 1899 முதல் 1906 வரை ஆங்கில ஆதிக்க காலத்தில் ஆளுநராக இருந்த (Governor) ‘லார்ட் ஆம்ட்இல்ஸ்’ (Lord Ampthills) என்பவர் தான் கண்ட தமிழகத்தை ‘மார்னிங்போஸ்ட்’ (Morning Post) என்னும் இதழில் படம் பிடித்துக் காட்டியிருப்பது மிகுந்த பயனுடையது.
“Nobody who has not lived in India can possibly understand the unique institution which is called ‘CASTE’ and only a few of the Europeans who have lived in India have any real comprehension of the system. For practical purposes it is sufficient to know.
i) That Caste and Hinduism are inseperable; infact, that the Caste idea is the soul as well as the body of Hinduism.
ii) That no Indian escape from that influence of the Caste idea.
iii) That the existence of the Caste spirit obsolutely precludes the establishment of the domocratic ideal, which is that of equality of all man before the law.
இதன் தமிழாக்கம் வருமாறு:
இந்தியாவில் வாழ்ந்த அனுபவமில்லாத எவரும் அங்கு நிலவும், தனிப்பட்ட ‘ஜாதி’ என்னும் அமைப்பைப் பற்றிப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. இந்தியாவில் வாழ்ந்த அய்ரோப்பியர்களில் ஒரு சிலரால் மட்டுமே இந்த ‘ஜாதி’ அமைப்பின் உட்பொருளை அறிந்து கொள்ள முடியும். இருப்பினும் நடைமுறைக்காக இவற்றைத் தெரிந்து கொண்டாலே போதுமானது:
1. இந்நாட்டில் நிலவும் ஜாதிகளும், இந்து மதமும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க முடியாதவை. இதில் உண்மையென்ன வெனில் ஜாதியக் கருத்தின் உயிராகவும், உடலாகவும் இருப்பது இந்து மதமே.
2. இந்த ஜாதியக் கோட்பாட்டின் தாக்குதலிலிருந்து இந்தியர் ஒருவர்கூட தப்பிக்க முடியாது.
3. இப்போதும் நடைமுறையில் உள்ள இந்த ஜாதிய அமைப்பு முறை _ ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்கிற மக்களாட்சித் தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பெருந்தடையாக உள்ளது.
இத்தகைய அமைப்பு முறையை _ ஏற்பாட்டை உருவாக்கித் தனக்குத் சாதகமாகப் பயன்படுத்திவந்த பார்ப்பன இனத்தை _ ஆபி.ஜே.ஏ.துபாய்ஸ் (Abbe J.A.Dubois) என்னும் ஆங்கிலேயர் தன்னுடைய எழுதுகோல் நுனியால் வரைந்த படம் இது.
“பார்ப்பனர் தங்களைப் பற்றி வைத்திருந்த உயர்வு மனப்பான்மை நீக்க முடியாதது _ மிக அழுத்தமானது. இவர்கள் ஏழையோ, பணம் படைத்தவரோ, வாய்ப்புள்ளவரோ, வாய்ப்பற்றவரோ _ இதைப்பற்றிக் கவலையின்றி எல்லோரும் பின்பற்றிய கொள்கை ஒன்றுதான். அக்கொள்கையின்படி உலகில் படைக்கப்பட்ட உயிர்களிலேயே தாங்கள் மட்டுமே புனிதமானவர், ஒழுக்கமானவர் என்றும், மற்ற எவ்வுயிரும் அவர்களுக்குக் கீழானவர்களே என்றும், தங்களுடைய பழக்கவழக்கங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் மேலானது உலகில் எதுவுமே இல்லை என்றும் எண்ணி நடந்தனர்.’’