பெரியார் இயக்கத்தின் பணியைத் தொடரும் பெரியாறு

டிசம்பர் 16-31

கடந்த ஆண்டு சபரிமலை மகரஜோதியைப் பார்க்கப்போய் புல்மேடு பகுதியில் நசுங்கிச் செத்தவர்களில் தமிழர்களே அதிகம். ஆனாலும் மல்லுக்கட்டிக்கொண்டு இந்த ஆண்டும் பலர் இருமுடி தூக்கத் தொடங்கினர். அய்யப்பனின் ஆபாசக் கதைகளையும், மூடத்தனத்தையும் தோலுரித்துப் பெரியார் இயக்கம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தப் பணியை இப்போது பெரியாறு பிரச்சினை சாதித்திருக்கிறது. அய்யப்ப ப(க்)தர்கள் கேரள எல்லையில் தடுக்கப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெறுவதால் ஆங்காங்கே மாலையைக் கழற்றிவிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குப் போகமாட்டேன் என்று கும்பல் கும்பலாக அறிவித்துப் போராட்டமாகவே செய்து கொண்டிருக் கிறார்கள். ஏன் அங்கேபோய் உணவு வாங்க வேண்டும்-? சாக வேண்டும் என்ற எண்ணம் இப்போதாவது வந்திருக்கிறதே! பெரியார் இயக்கத்தின் பணியை பெரியாறு அணையும் செய்கிறது போலும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *