மாற்றம்

ஜனவரி 16-31

வயல்வெளி
நிலங்களில்,
வரப்புகள் விரிந்து
சந்துகளானது,
வாய்க்கால் சுருங்கி
வாறுகால் ஆனது.
நாற்று நட்ட
இடங்களிலெல்லாம்
நடு கற்கள்
பாத்திகட்டிய
இடங்கள்
வீடு கட்டிய
நிலங்களாய்,
உயிர்கள்
அடைக்கலமானது,
பயிர்களோ
அடக்கமானது!

-ஆல.தமிழ்ப்பித்தன், புனல்வேலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *