Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வயல்வெளி
நிலங்களில்,
வரப்புகள் விரிந்து
சந்துகளானது,
வாய்க்கால் சுருங்கி
வாறுகால் ஆனது.
நாற்று நட்ட
இடங்களிலெல்லாம்
நடு கற்கள்
பாத்திகட்டிய
இடங்கள்
வீடு கட்டிய
நிலங்களாய்,
உயிர்கள்
அடைக்கலமானது,
பயிர்களோ
அடக்கமானது!

-ஆல.தமிழ்ப்பித்தன், புனல்வேலி