Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தலைமுறைக்காக தண்ணீரைச் சேமியுங்கள்

கேப் டவுன்

தென்னாப்பிரிக்காவின் தலைநகரான கேப்டவுன். அதன் அரசாங்கம் ஏப்ரல் 14, 2023க்குப் பிறகு தண்ணீர் வழங்க இயலாமையைக் காட்டியதால், உலகின் முதல் தண்ணீர் இல்லாத நகரமாக அறிவிக்கப்பட்டது.

அங்கு குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
10 லட்சம் குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்தியாவில் பெட்ரோல் வழங்கும் நிலையங்களுக்குச் சென்று பெட்ரோல் வாங்கும் விதம் போல கேப்டவுனில் 25 லிட்டர் தண்ணீர் கேன்களில் மட்டுமே தண்ணீர் கிடைக்கும். மேலும் தண்ணீர் கேட்பவர்களையோ, கொள்ளையடிப்பவர்களையோ சமாளிக்க போலீஸ் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் இதைப் போன்றதொரு சோகப் பயணம் வருங்காலத்தில் எங்கும் நிகழக்கூடும்.
எனவே, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்.
தண்ணீரை வீணாக்குவதை நிறுத்துங்கள்.

பக்கத்து மாநிலமான கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவில் தற்போது கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
லத்தூருக்கு (மகாராஷ்டிரா) ரயில் மூலம் தண்ணீர் அனுப்பப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.
உலகில் உள்ள தண்ணீரில் 2.7% மட்டுமே குடிநீராக உபயோகிக்கக் கூடியது.
குழு உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள் !!

அருகில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் வெகு ஆழத்திற்குச் சென்றுள்ளது. பொறுப்புள்ள குடிமகனாக, தண்ணீரை வீணாக்குவதைத் தடுத்து, தண்ணீரைச் சேமிப்போம். இல்லையெனில், நாமும் இந்த நெருக்கடியை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்போம், நமது உணர்வற்ற செயல்களால் நமது வருங்காலத் தலைமுறை பாதிக்கப்படும் என்பதைக் கவனத்திற்கொண்டு அவர்களுக்காக நீரைச் சேமிக்கவேண்டியது நம் கடமையாகும்.