வேண்டுதலும், பிரார்த்தனையும் விளையாட்டில் வெற்றி தருமா?

கொரோனா காலத்தில் கோயிலில் உள்ள கடவுள் சிலைகளுக்கே மாஸ்க் அணிவித்து, கோயிலை இழுத்து மூடினார்கள் அப்போதே கடவுளின் சக்தி சந்தி சிரித்தது. எவ்வளவு கண்கூடாக பலவற்றைப் பார்த்தாலும், பாமர மக்கள் மட்டுமல்ல, அறிவியல் படித்த பட்டதாரிகள் கூட மூடநம்பிக்கையின் முகட்டில் நிற்பது வேதனைக்குரிய நிகழ்வுகளாகும். சந்திரனுக்கு விண்கலம் அனுப்பினால் ஏழுமலையானுக்கு வேண்டிக்கொள்வது என்ன விஞ்ஞானம்? இராக்கெட் விடுவதற்கும் ஏழுமலையானுக்கும் என்ன தொடர்பு? வெற்றிகரமாக ஏவப்படவும், இலக்கு நிறைவேறவும் ஏழுமலையான் எந்த வகையில் உதவுவார்? சந்திரயான்-3 நிலவின் தரையில் […]

மேலும்....

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் – பிறப்பு 29.11.1908

கலைவாணரைப் பற்றி தந்தை பெரியார் அவர்கள் 1.11.1944 தேதியிட்ட ‘குடிஅரசு’ ஏட்டில், “இனி அவர் செத்தாலும் சரி; அவர் பணம் காசெல்லாம் நழுவி அன்னக்காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி; நாடகப் புரட்சி உலகைப் பற்றிச் சரித்திரம் எழுதப்பட்டால், அச்சரித்திரத்தின் அட்டைப் படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் படம் போடாவிட்டால், அச்சரித்திரமே தீண்டத் தகாததாகிவிடும்’’ என்று எழுதினார். இதைவிட கலைவாணருக்கு வேறென்ன சிறப்பு வேண்டும்?

மேலும்....

பண்பாட்டுப் படையெடுப்பிற்கு பலியாகலாமா? சிந்திப்பீர் !

நவராத்திரி கொண்டாடி, நாக்கிலே எழுதினால் படிப்பு வரும் என்று ஆரிய பார்ப்பான்முன் அமரும் தமிழா! உனக்கு சரஸ்வதியா கல்வி கொடுத்தாள்? சரஸ்வதி கல்வி கொடுத்திருந்தால் உன் பாட்டனுக்கும் முப்பாட்டனுக்கும் அவள் ஏன் கொடுக்கவில்லை? சிந்தித்தாயா? ஏகலைவன்களைக் காவு வாங்கிய அவலம் மாறியது யாரால்? எண்ணிப் பார்த்தாயா? தீபாவளியைத் தீவிரமாய்க் கொண்டாடுகிறாயே! அது தமிழன் பண்டிகையா? காசைக் கரியாக்கும், காற்றை மாசாக்கும் கண்மூடிச் செயல்களைக் கற்றவர்களும் செய்வது சரியா? கற்றவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டாமா? விழி திறக்க வேண்டாமா? […]

மேலும்....

ஸனாதனம் பற்றி தந்தை பெரியார்

“பார்ப்பான் காலைக் கழுவித் தண்ணீரைத்தான் குடிக்க வேண்டும். பார்ப்பான் சாப்பிட்டு மீதியான எச்சிலைத்தான் சாப்பிடவேண்டும். பார்ப்பானைத்தான் கடவுளாகக் கருதி, கும்பிட வேண்டும் என்று இருப்பதை மாற்றாமல், சும்மா இருந்து கொண்டு வரும் உங்களுக்குக் கடவுள் அருகில் நாங்கள் போனால் மாத்திரம் கோபம் வருகிறதே” என்று கேட்டேன். அவர்களால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. பிறகுதான் சந்துக்குச் சந்து பிள்ளையாரைப் போட்டு உடைக்கச் சொன்னேன். இராமன் படத்தைத் தீயிட்டுக் கொளுத்தச் சொன்னேன். இராமாயணத்தை அணுஅணுவாகப் பிரித்து எழுதினேன். பார்ப்பனர்கள் […]

மேலும்....

ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் (பிறப்பு – 15.9.1893)

திரு. சவுந்தரபாண்டியன் அவர்கள் மதுரை மாவட்டம், பட்டிவீரன்பட்டியில், 15.9.1893இல் பிறந்தார். இவரின் பெற்றோர் திரு. அய்ய நாடார் – திருமதி. சின்னம்மாள் ஆவார்கள். மதுரை, விருதுநகர் ஆகிய ஊர்களில் பள்ளிப் படிப்பும், கல்லூரிக் கல்வியும் பயின்றார். இதன்பின் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு, அதன்வழி சுயமரியாதை இயக்கத்தில், பெரியார் அவர்களோடு இணைந்து செயல்படத் தொடங்கினார். வெறியோடு சுயமரியாதைக் கொள்கைகளைப் பின்பற்ற முனைந்த இவரை, 1929இல் செங்கற்பட்டு மாநாட்டுத் தலைவராக பெரியார் அவர்களும், இயக்கத்தின் முன்னோடிகளும் தேர்ந்தெடுத்தனர். […]

மேலும்....