பேரீச்சை பிரச்சினை!

உங்களுக்குத் தெரியுமா? பிப்ரவரி 1-15

பேரீச்சம் பழம் என்றதுமே அதில் அதிக அளவில் சத்துகள் இருப்பதும், ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்றது என்பதும்தான் எல்லோருக்குமே நினைவுக்கு வரும்.

ஆனால், பேரீச்சை உண்பதால் சில பிரச்சினைகள் வரவும் வாய்ப்பு உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?

குளுகோஸை விடவும் அடர்த்தியான சர்க்கரை பேரீச்சம் பழத்தில் நிறைந்துள்ளது. எனவே, டைப்-2 வகை நீரிழிவு நோயாளிகள் இதனைச் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும்.

கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் தின்றதும் வாய் கொப்பளிக்காமல் இருந்தால், பற்கள் சொத்தையாகி விடுவதற்கான வாய்ப்பு உண்டு. இதை உண்பதால் சிலருக்கு உடல் எடை அதிகரிக்கலாம்.பார்த்ததுமே கவர்ந்திட வேண்டும் என்பதற்காக பேரீச்சையின் மேல் மெழுகு, எண்ணெய் போன்ற வற்றைத் தடவி விற்பதும் உண்டு.

அத்தகைய பேரீச்சம் பழங்களை உண்பதால் ஒவ்வாமை, மெழுகினால் ஏற்படும் வயிறு உபாதைகள் வர வாய்ப்பு உள்ளது.

நாள்பட்ட பேரீச்சம் பழத்தைச் சாப்பிடுவதால் குடலில் அடைப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.ஒரு வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்குப் பேரீச்சை உகந்தது அல்ல. ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து குழந்தைகளின் குடலைப் பாதிக்கும் அபாயம் உள்ளது.சர்க்கரை நோயாளிகளைத் தவிர மற்றவர்கள் தரமான, புதிய பேரீச்சையை உண்பதே நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *