Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

காரல்மார்க்ஸ் பிறப்பு – 5.5.1818

உலக வரலாற்றில் மங்காப்புகழுடன் தலைசிறந்து விளங்குபவர் கார்ல் மார்க்ஸ். 5.5.1818 அன்று ஹெய்ன்ரிச் மார்க்ஸ், ஹென்றியேட்டா பிரஸ்பார்க் ஆகியோர்க்கு மகனாக ஜெர்மனியில் டிரைலர் என்னும் இடத்தில் பிறந்தார். காரல் மார்க்சின் பெற்றோர்கள் ஜெர்மனியில் வழக்குரைஞர்களாகப் பணியாற்றி வந்தனர்.

காரல் மார்க்ஸுக்கு படிப்பில் ஆர்வம் இருந்தபோதிலும் தத்துவமும் வரலாறும் பிடித்திருந்தது. தனது ஆருயிர் நண்பர் ஃபிரடெரிக் ஏங்கல்சுடன் இணைந்து கம்யூனிசக் கொள்கையைப் பிரகடனம் செய்தார். உலகப் பட்டாளி மக்களுக்கு வழிகாட்டும் (மூலதனம்) தத்துவத்தைத் தந்தவர். தலைசிறந்த புரட்சியாளராக, தொழிலாளி வர்க்கத்தின் லட்சியத்திற்கு வளைந்து கொடுக்காத போராளியாக காரல் மார்க்ஸ் உயர்ந்து நிற்கிறார்.

உலக நாடுகளின் சோஷலிஸ்டு (சமதர்மவாதி)களுக்குப் போதனை செய்தபேராசிரியர். ஆழமான காட்சி உணர்வு
மிக்கவர். கொள்கைப் போராட்டத்தில் விட்டுக்கொடுக்காமல் போராடி தன் கொள்கைக் கருத்தை நிலைநாட்டியவர். இயற்கை, சமூகம் ஆகியவற்றின் வளர்ச்சிப் போக்குகளின் விதிகளின் விஞ்ஞானத்தை உருவாக்கியவர், வளர்த்தவர்.

– தொகுப்பு : பொ.அறிவன், கழனிப்பாக்கம்