வாழ்வியல் சிந்தனைத் துளி!

டிசம்பர் 01-15, 2020

*           நூலைப் படித்து, தகவல்களைப் பெற்று, ஆய்வு செய்து அறிவைப் பெருக்கினால் ஆயுள் வளரும்.

இயங்கினால்தான் மூளை;  இன்றேல் அது வெறும் ஈளை.

*           தொண்டால் உயரும் அறிவே உண்மை அறிவு; அது ‘கற்பதால்’ வரும் அறிவு; வெறும் ‘படிப்பால்’ பெறும் அறிவு அல்ல; இரண்டும் வெவ்வேறானவை. காரணம், கற்பது வேறு; படிப்பது வேறு.

*           நம்முள்ளே உள்ள ஓர் எதிரிப் பட்டாளத்தில் முன் வரிசையில் உள்ள ஒரு முழு எதிரியின் பெயர்தான் திருவாளர் ‘சுயநலம்!’

 –  ஆசிரியர் கி.வீரமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *