வாசகர் மடல்!

நவம்பர் 01-15

மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, கோவில்பட்டியிலிருந்து எஸ்.ஜெயா எழுதுவது. அக்டோபர் 1_15 உண்மை இதழைப் படித்தேன். பெற்றதாய் பிள்ளைகளையும் பெற்ற பிள்ளைகள் தாயையும் மறக்கும் காலம் இது. நம்முடைய திராவிடர் கழகம்தான் நன்றிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. பழையக்கோட்டை அர்ச்சுனன், செ.தெ.நாயகம் இவர்கள் யார்? இவர்கள் செய்த தொண்டு என்ன? இவர்கள் மட்டும் அல்ல, இன்னும் அநேகரை வெளியிட்டு அவர்கள் செய்த நற்பணிகளையும் எழுதி வெளியிட்டு அவர்கள் பிறந்த நாள் மற்றும் நினைவுநாளை வெளியிடுகிறீர்கள். என்னைப் போன்றவர்களுக்கும் உண்மை இதழைப் படிக்கும் இளைய தலைமுறையினருக்கும் அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் பெரிய வாய்ப்பாக உள்ளது. இவை மட்டும் அல்ல _ பெண் சிறுகதை அன்புமொழி எழுதியுள்ளது மிகவும் அருமை. கீழடி அகழாய்வு அதிகாரி மாற்றப்பட்டு உள்ளதையும் வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள். சிகரம் பகுதி அனைவரையும் சிந்திக்க வைக்கும். ‘உண்மை’ இதழ் சிறந்ததோர் சிந்தனைக் களஞ்சியம்.
அய்யா, எங்கள் ஊரில் பெரியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடினோம். அதில், லதா டீச்சர், மாதவன், நாராயணன், செந்தட்டிகாளை இப்படி அநேகர் கலந்துகொண்டு எங்கள் ஊரில் (ஜமீன்தேவர்குளம்) உள்ள பள்ளிப் பிள்ளைகளுக்கு நோட்டு, பேனா என்று எங்களால் முடிந்தவற்றை வழங்கினோம். இதில் என்ன அதிசயம் என்றால், மேலே சொன்ன அத்தனைப் பேரும் உண்மை வாசகர் ஆகி உள்ளார்கள்.

பெருமாளை சேவித்த மனம் பெரியாரைப் பார்க்கிறது. தீபத்தை நோக்கிய கண்கள் தி.க.வை நோக்குகிறது. பைபிளையும், கீதையையும் ஏந்திய கரங்கள் ‘விடுதலை’யையும் ‘உண்மை’யையும் ஏந்துகிறது. அய்யா வளரட்டும் உங்களுடைய தொண்டு!

எஸ்.ஜெயா,
கோவில்பட்டி

ஒவ்வாக் கருத்தை ஒழித்திடும் உண்மை!

ஆரிய அழும்பை அழித்தே ஒழிக்கும்
கூரிய வாளால் கூறு போட்டிடும்
மதவெறி மாய்த்து மனிதம் வளர்த்திடும்
சாதியைச் சாய்த்து சமத்துவம் வளர்த்திடும்
அடிமை வாழ்வை அழித்தே ஒழிக்கும்
மிடிமை இல்லா மீள்வாழ் வளிக்கும்
சூத்திரப் பட்டம் சுமக்கும் தமிழனின்
நேத்திரம் திறந்து நல்வழிப் படுத்தும்
கற்பனைச் சரக்காம் கடவுள் தன்னை
கற்சிலை தன்னில் இருப்பாய் ஆக்கி
இவ்வுல கேய்க்கும் ஈனர் தன்னின்
ஒவ்வாக் கருத்தை ஒழித்தே தீரும்!

தலைக்கனம் கொண்ட தருக்கர் கருத்தை
தலையங்கத் தாலே தகர்த்தே எறியும்
பெரியார் கண்ட பேறுடை ஏடே
எரியும் நெருப்பாய் எரித்திடும் கேட்டை
ஆசிரியர் அறிக்கை அரணாய் நின்று
பேசிடும் கொள்கை பெருமை சேர்க்கும்
ஆசிரியர்தன்சரிதை “அய்யாவின் அடிச்சுவட்டில்’’
பேசிடும் இயக்கத்தின் பெருமைமிகு வரலாற்றை
மஞ்சை வசந்தனின் மாண்புடை எழுத்துகள்
நெஞ்சை நிமிர்த்தி நேர்மை பேசும்
அறிவுக்கர(சு) ஆதாரங்கள் திரிபுகளை      
                                         சிதறடித்தே                     
அம்பேத்கர் நிலையை தெளிவு படுத்தும்
இத்தனை பெற்றியும் ஏந்துவதே
உண்மை இதழென உரக்கச் சொல்வேன்
கண்ணெனப் போற்றிக் காப்பீர் இதையே!

வடபாதியான்
சென்னை

அய்யா, நான் 2 வருடங்களுக்கு முன்பாக மணிக்கூண்டு அருகில் புத்தகக்காட்சி நடந்தபொழுது தந்தை பெரியார் அவர்களின் புத்தக ஸ்டாலுக்குள் நுழைந்தேன். அங்கு இருக்கும் புத்தகங்களைப் பார்த்துவிட்டு ‘உண்மை’ இதழுக்கு சந்தா கட்டினேன். உண்மையை வாங்கிப் படிக்கும்போதுதான் கல்வியில் பார்ப்பனர்கள், ஆரியர்கள் எவ்வளவு தூரம் தமிழ் மக்களை, திராவிடர்களை மட்டுமல்லாது முஸ்லிம் சமுதாயத்திற்கும் கேடு விளைவித்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது. என்னுடைய முன்னோர்கள் எல்லாம் மதம் மாறி வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். பார்ப்பனர்களுக்கு மட்டும் பள்ளிகள், கல்லூரிகள், அவர்கள் மட்டுமே படிக்க என்று ஏற்படுத்தி சேர, சோழ, பாண்டிய, முஸ்லிம், நாயக்க முட்டாள் மன்னர்கள் ஆதரவாக இருந்துள்ளனர். சூத்திரன் படிக்கக் கூடாது. அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொல்கிறது இந்து மதம். பிச்சை எடுக்கும் தொழில் செய்ய வேண்டிய பார்ப்பனர்கள் தமிழ் மணமகளை விபச்சாரி மகள் என்று சொல்லி கேவலப்படுத்துகின்றனர். பார்ப்பன புரோகிதன் தமிழ் மணமகளைப் பார்த்து தேவிடியாள் மகள் என்று சமஸ்கிருதத்தில் சொல்கிறான் (மனுதர்மம்). எல்லா மதங்களிலுமே பகுத்தறிவில்லாத முட்டாள்தனம் நிறைய உள்ளது. என் இந்து நண்பர் ராஜ்குமாரிடம் ‘முருகன்’ (கடவுள்) யார் என்று கேட்டேன். அவர் ‘கடவுள்’ என்றார். அவரிடம் முருகனின் மதம், ஜாதி, குலம், கோத்திரம், தாய், தந்தையார் பற்றிக் கேட்டேன். தெரியாது என்றார். முருகன் பார்ப்பனர் என்றும், அவர் தாய் பார்வதி, தந்தை சிவன், விநாயகர் எல்லாம் பார்ப்பனர்கள் என்றும், கிருஷ்ணன், பிரம்மன், விஷ்ணு, சிவன், காளியாத்தாள், மாரியாத்தாள், திருமால், சரஸ்வதி, சாவித்திரி, இந்திரன், மதுரை மீனாட்சி, சபரிமலை அய்யப்பன், அம்மன் சாமிகள், லட்சுமி, துர்கா, மூகாம்பிகை, பார்த்தசாரதி என எல்லாமே பிராமண கடவுள்கள் என்றேன். உங்களுக்கு பொங்கல் பண்டிகை மட்டும்தான் உள்ளது என்றேன். நீங்கள் பிரசுரிக்கும் எல்லா இதழ்களிலும் ‘கடவுள்’ என்ற வார்த்தைக்கு முன்பு “பார்ப்பனன்’’ என்ற வார்த்தையை (உதாரணம்: பார்ப்பன முருகன் கடவுள்) சேர்க்கலாம் என தெரிவித்தேன். அவரிடம் அசல் மனுதர்ம புத்தகம் கொடுத்து படிக்கச் சொல்லியிருக்கிறேன். பாரதிய ஜனதா ஆரியப் பார்ப்பனர்களின் அடிமையாக செயல்பட்டு வருகிறது. காவிகளின் அட்டகாசம் அதிகமாகிறது. பார்ப்பனர்கள் இந்து மக்களை, தமிழர்களை முட்டாளாக்க ‘கடவுள்’ என்ற என்ற பெயரைச் சொல்லி மூளைச் சலவை செய்து ஏமாற்றி வருகின்றனர். இதற்குக் காரணம் நம்மிடம் படிப்பு இல்லாததுதான். நமக்குத் தேவை படிப்பு, படிப்பு, படிப்பு (கல்வி). சிறு வயதிலிருந்தே பள்ளிக் குழந்தைகளுக்கு பகுத்தறிவு பற்றிச் சொல்லித் தரவேண்டும். தங்கள் தலைமையில் தொலைக்காட்சி (டி.வி.) ஆரம்பித்தால் பொதுமக்கள் பகுத்தறிவு பெறுவார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பெரியார் பிறந்திருந்தால், பகுத்தறிவு வளரும்.

அ.சிராஜுதீன், சென்னை–_92

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *