முத்தமிழறிஞர் கலைஞர்

2024 ஆகஸ்ட் 1-15, 2024

“டாக்டர் கலைஞர் அவர்கள் பள்ளியை விட்டு வாலிபப் பருவத்திலேயே என்னோடு தொண்டு செய்ய வந்துவிட்டார். பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்புவதில் என்னோடு சேர்ந்து பல இன்னல்களையெல்லாம் ஏற்றார்.

தன் வாழ்நாள் ஒவ்வொன்றிலும் மக்கள் நலம் பற்றிச் சிந்திப்பதிலும் தொண்டாற்றுவதிலுமே நடப்பதை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். மனம் பூரித்து திருப்தி அடைந்து வருகிறேன். மற்றவர்கள் சிந்திக்கக்கூட பயப்படும்படியான காரியங்களை வெகு எளிதில் செய்து முடித்து விடுகிறார்”.

– தந்தை பெரியார்