குடிஅரசு’ நூற்றாண்டைக் கொண்டாடுவோம்! -… முனைவர் கடவூர் மணிமாறன் ..

குடிஅரசாம் இதழ்தொடங்கி நூறாம் ஆண்டைக் கொண்டாடித் தமிழர்நாம் மகிழு கின்றோம்! தடியாக விளங்கியது; பெரியா ருக்கோ தன்மதிப்புப் பேரியக்க வாளா யிற்று! இடஒதுக்கீட் டுரிமையினை எழுப்பி வந்த இனமானப் போர்முரசம் இதுவே ஆகும்! அடிமையென வாழ்ந்திட்ட தமிழர் எல்லாம் ஆர்த்தெழவே செய்திட்ட ஏடும் ஆகும்! பெரியார்மண் திராவிடமண் இதுவே என்று பேசவைத்த குடிஅரசாம் இதழின் மூலம் அறிவுக்குத் தடையாக மனித நேய அன்புக்குத் தடையாக இருந்த வற்றைச் சரியாக ஏற்புடனே முறிய டித்தார்! சழக்கினராம் பார்ப்பனரின் புரட்டை […]

மேலும்....

அயோத்தி தாச பண்டிதர் ! – முனைவர் கடவூர் மணிமாறன்

உயரிய குறிக்கோள், கொள்கை உடையார் அயோத்தி தாச பண்டிதர்; போற்றும் ஆய்வு நாட்டம் அறிந்த மருத்துவர் ஓய்வே இன்றி இனநலன் காத்தவர்; சுயமரி யாதை உணர்வை ஊட்டிய நயத்தகு எழுச்சி மறவர்! நாட்டில் இந்து மதத்தைச் சார்ந்த மொழியாம் இந்தியோ பொதுமொழி ஆகா என்றவர்! வேதப் புரட்டுகள் விதைத்து வந்தோர் ஆதிக் கத்தைத் தகர்க்கத் துணிந்தவர்! ஒடுக்கப் பட்டோர் உயர்நிலை எய்திடப் படிக்கப் பள்ளிகள் திறக்கவும் பள்ளியில் நண்பகல் உணவை நல்கவும் அந்நாள் எண்ணிய சிந்தனை யாளர்! […]

மேலும்....

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ! – முனைவர் கடவூர் மணிமாறன்

நெருப்புவரிப் பாட்டெழுதி நிமிர்ந்து நின்றே நிலைகுலைந்த தமிழினத்தின் மீட்சி நாடிப் பெரும்புரட்சிக் கருத்தியலை விதைத்தார்! தந்தை பெரியாரின் சிந்தனைகள் தம்மை எல்லாம் எரிமலையாம் தீக்குழம்பில் இணைத்துத் தோய்த்தே இடர்நீக்கும் பகுத்தறிவு யாழை மீட்டித் திராவிடத்தின் மாண்பெல்லாம் வரலா றாக்கித் திருப்புமுனை பாட்டுலகில் மிளிரச் செய்தார்! ஆரியத்தின் சூழ்ச்சிகளைத் தமிழர் கூட்டம் அறிந்திடவே பண்ணிசைத்தார்! அடிமைப் போக்கை வீரியமாய்க் கனன்றெதிர்த்தார்; மதங்கள் சாதி வேண்டாத மூடநெறி மடமை வீழச் சீரியநற் சீர்திருத்தப் பாக்கள் மூலம் செம்மாந்த புரட்சியினை நடவு […]

மேலும்....

அண்ணல் அம்பேத்கர்! – முனைவர் கடவூர் மணிமாறன்

அய்யா பெரியார் அம்பேத்கர் இருவரும் மெய்யாய் நம்மவர் மேன்மை விழிகள்! சாதி மதங்கள் சார்பை நீக்கிய நீதித் துறையின் அடிப்படை மய்யம்! அரசியல் அமைப்புச் சட்டத் தந்தை; விரவிய இழிவினை வெகுண்டே எதிர்த்தவர்; ஒடுக்கப் பட்டோர் உயர்வை எய்திடத் துடித்தவர்! பற்பல தொண்டறம் புரிந்தவர்; பல்துறைக் கல்வியைப் பாங்குறக் கற்றவர்; அல்லும் பகலும் அயரா துழைத்த மானுட உரிமைக் காவலர்; ஆரியர் நாணிடக் களத்தில் முன்னே நின்றவர்! முன்னோர் தொழிலை மரபினர் எல்லாம் தன்தொழி லாகத் தலைமேற் […]

மேலும்....

பட்டுக்கோட்டை அழகிரி ! – முனைவர் கடவூர் மணிமாறன்

தன்மானப் பேரியக்க அஞ்சா நெஞ்சன் தளபதியாய் அந்நாளில் களத்தில் நின்ற மன்னுபுகழ்ப் பெரியாரின் தொண்டர், தோழர்! மாண்பார்ந்த திராவிடத்தின் கொள்கைக் குன்றம்! பன்னரிய இழிவெல்லாம் சுமக்கச் செய்து பாழ்படுத்தி இன்புற்ற பகைவர் கூட்ட வன்மத்தை கிழித்தெறிந்த பட்டுக்கோட்டை வல்லரிமா அழகிரியை மறக்கப் போமோ! பகுத்தறிவுப் போராளி! நாட்டின் மேனாள் படைமறவர் இவராவர்! நமது முன்னோர் வகுத்திட்ட நெறியாவும் நினைவு கூர்ந்தே வன்கொடிய ஆரியத்தை வீழ்த்து தற்கே மிகத்துணிவாய்ப் பழந்தமிழர் சால்பை யெல்லாம் மேன்மையுறப் பதித்திட்டார்! மக்கள் நெஞ்சில்! […]

மேலும்....