வரலாறும் தனிமனிதர்களும் !- குமரன்தாஸ்

தனி மனிதர்களால் வரலாறு படைக்கப் படுவதில்லை! மக்களே வரலாற்றைப் படைக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், தனிமனிதர்களால் மனிதகுலத்தின் முன்னேற்றத்தைச் சீரழிக்க முடியும் என்பதற்கு இங்கு முன்னுதாரணங்கள் நிறைய உள்ளன. அதைப்போலவே மனிதகுலத்தை முன்னேற்றுவதற்குப் பாடுபட்ட மாமனிதர்கள் வரலாற்றில் நிலைக்கிறார்கள் என்பதற்கும் சான்றுகளாகப் பலர் உள்ளனர். அந்த அடிப்படையில்தான் நாம், கடந்த காலத்தில் மக்களின் நல்வாழ்க்கைக்குப் பாடுபட்ட மாமனிதர்களையும் தலைவர்களையும் சிந்தனையாளர்களையும் போற்றுவதோடு நில்லாமல் நிகழ்காலத்திலும் மக்கள் நலனைக் காக்கும், எதிர்காலச் சந்ததியினரின் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் தலைவர்களையும் போற்றுகின்றோம். […]

மேலும்....