வியன்னா பிரகடனமும் நடவடிக்கைத் திட்டமும்-(சென்ற இதழ் தொடர்ச்சி…)

19. சிறுபான்மையினர், உரிமைகளைப் பேணுவது-பாதுகாப்பது ஆகியவற்றின் முக்கியத்துவம், அப்படிப் பேணுவதும் பாதுகாப்பதும் அவர்கள் வாழும் நாடுகளின் சமூக – அரசியல் உறுதிப்பாட்டுக்குச் செய்யும் பங்களிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அத்தகைய சிறுபான்மையினர் சகலவித மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் எவ்விதப் பாகுபாடுமின்றியும் சட்டத்தின் முன் முழு சமத்துவ அடிப்படையிலும் முழுமையாகவும் பயனுள்ள வகையிலும் அனுபவிப்பதை உறுதிசெய்ய வேண்டிய கடப்பாடு அரசுகளுக்கு இருப்பதை இம்மாநாடு உறுதியிட்டுரைக்கிறது. தம்முள்ளும், வெளியிலும், சுதந்திரமாகவும், குறுக்கீடோ, எந்த வகையான பாகுபாடுகள் இன்றியும் தமது […]

மேலும்....