தமிழர் தலைவருக்கு – தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர்” விருது !

சென்னைத் தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் மாண்புமிகு முதலமைச்சர் தேசியக் கொடியை 15.8.2023 காலை 9 மணிக்கு ஏற்றினார். அதன்பின் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் முதலாவதாக – திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு “தகைசால் தமிழர் விருதும் ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையையும் தமிழக முதல்வர் வழங்கிச் சிறப்பித்தார். “தகைசால் தமிழர் விருது” வழங்கப்பட்ட திராவிடர் கழகத் தலைவர் பற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான – சிறப்பான […]

மேலும்....

தகைசால் தமிழர் ஆசிரியர்! – முனைவர் கடவூர் மணிமாறன்

மிகையே இல்லை மேன்மைப் புகழ்மிகு தகைசால் தமிழர்! தறுகண் மறவர்; தந்தை பெரியார் தலைமை ஏற்ற சிந்தனை யாளர்; அகவை பத்தில் ஒலிவாங் கியின்முன் உரைகள் ஆற்றிய வலிமை மிக்கவர்; எண்ப தாண்டுகள் ஓய்வே இன்றி உணர்ச்சிப் பெருக்குடன் தாய்மொழி, தமிழர், தமிழ்நா டுயர்ந்திட உழைக்கும் திறத்தினர்; உயரிய நுண்மாண் நுழைபுலம் யாவும் எய்திய ஏந்தல்! விடுதலை உண்மை பெரியார் பிஞ்சு மிடுக்குற திராவிடப் பொழிலை நடத்தும் இதழியல் வல்லார்! எவர்க்கும் நல்லார்! உதவும் பண்பினர்; உண்மை, […]

மேலும்....