அண்ணாவின் புகழ்பாடுவோம்!-முனைவர் கடவூர் மணிமாறன்

வான்மழைபோல் பொழிந்திட்ட கருத்துக் கொண்டல்! வற்றாத தமிழருவி! கொள்கைக் கோட்டம்! தேன்போல நாவினிக்கப் பேச வல்லார் திராவிடநா டிதழ்காஞ்சி ஏடு தந்தார் கான்மலராய் மணக்கின்ற சொற்க ளாலே கண்ணியத்தை, கடமையினை, கட்டுப் பாட்டைப் பான்மையுற வலியுறுத்தி உலகில் வாழும் பைந்தமிழர் நெஞ்சமெலாம் நிறைந்தார் அண்ணா! ஆங்கிலத்தில் அருந்தமிழில் உரைகள் ஆற்றும் அருந்திறலைக் கொண்டிருந்த அறிவுச் சொற்கோ! தீங்கெவர்க்கும் எண்ணாத காஞ்சித் தென்றல்! திராவிடத்துப் புகழ் நிலவாய்த் திகழ்ந்த செம்மல்! பாங்குறவே இரண்டுமொழிக் கொள்கை ஏற்போம்! பகைப்புலத்தோர் இந்தியினை […]

மேலும்....