வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

கண்டம் இது வடசொல் என்கின்றனர் வட மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டவர்கள். வடமொழி பற்றுள்ளவர்களும் அப்படி. இடைக்காலப் புலவர்களும் இதை வட சொல்லென்றே வைத்துச் செய்யுள் செய்தார்கள். இனிக் கண்டம் என்பதைக் கண்டோம் என்று உச்சரிப்பதுதான் நாகரிகம் என்று எண்ணி அவ்வாறு சொல்லுகின்றார்கள் சிலர் இந்தத் திக்கில்லாத தமிழகத்தில். கண் என்பதின் பொருள் என்ன? இதை அணுகி ஆராய்தல் வேண்டும். கண் என்பதன் பொருள் இடம் என்று சிலர் பொருள் சொல்லி விடுகிறார்கள். அவ்வாறு சொல்லிவிட்டால் மட்டும் போதாது. […]

மேலும்....

இந்தியாவின் இரத்தச்சோகை நோயின் தாக்கம்!

இந்தியாவின் 5 வயதுக்குக் குறைந்த குழந்தைகளில் 58 சதவீதம் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கருவுற்றுள்ள தாய்மார்களில் 50% பேர் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். தேசியக் குடும்பநல இலாகாவின் கணக்கெடுப்பில் தெரியவரும் புள்ளிவிவரங்கள் இவை. கருவுற்ற தாய்மார்கள் பாதிக்கும் மேற்பட்டோர் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த  நோய் தவிர்க்க முடியாததாக உள்ளது. இந்நோயால் தாக்கப்படும குழந்தைகளின் இரத்தத்தில் ஹிமோகுளோபின் மிகவும் குறைவாக உள்ளமையால் அவர்கள் மிகச் சீக்கிரம் களைப்படைவதோடு எளிதாக தொற்றுநோய்-களுக்கு […]

மேலும்....

அன்னை மணியம்மையாரின் வீரம்!

தந்தை பெரியார் அவர்கள் தமது 95ஆம் வயதில் மறைவுற்ற பின்பு, திருச்சி – பெரியார் மாளிகையில் 6.1.1974-இல் நடைபெற்ற மாநில திராவிடர் கழக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கழகத் தலைமைப் பொறுப்பேற்று அன்னை மணியம்மையார் அவர்கள் ஆற்றிய உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிமிகு உறுதி – உரை வரிகள்: “இப்போது நான் மன உறுதியோடும், தைரியத்தோடும் இருக்கிறேன். அய்யா அவர்கள் இதுவரை செய்து வந்த காரியங்கள், பிரச்சாரம் இவற்றைச் சந்தேகத்திற்கு இடமின்றிச் செய்யக் காத்திருக்கிறேன். எந்த அளவிற்கு முழு […]

மேலும்....

தேர்வு எழுதுவோர் தெரிந்துகொள்ள வேண்டியவை!

¨    தேர்வு நெருங்க நெருங்க பதற்றம் வருவது இயல்பு. ஆனால், பதற்றம் தேவையற்றது. பதற்றத்தால் எப்போதும் பாதிப்புதானே ஒழியப் பயன் இல்லை. பதற்றமில்லாமல், நம்பிக்கையோடு நிதானமாக எச்செயலையும் செய்ய முற்படுவதே வெற்றியின் முதல்படி. தேர்வைக் கண்டு அஞ்சாமல் நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். ¨    படித்த பாடங்களை மீண்டும் படித்து நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து இடைவிடாமல் படித்துக் கொண்டிருப்பதை தவிர்த்து, சிறிய இடைவெளிவிட்டு, அந்த நேரத்தில் மனமகிழ்வான செயல்களைச் செய்து, மீண்டும் படிப்பது நல்லது. பாடங்கள் மனதில் நன்கு […]

மேலும்....

நீரிழிவு வயிற்றுப் புண், தோழ்நோய் நீக்கும் கோவைக்காய்

காய்கறிக்கடைகளில் விலை மலிவாகக் கிடைப்பது கோவைக்காய். கோவைக்காயில் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. கொடி வகையைச் சேர்ந்த கோவையின் காய், இலை, தண்டு, கிழங்கு என முழுத் தாவரமும் மருத்துவக் குணம் கொண்டது. கோவைக்காய் நீரிழிவு பிரச்சினையில் இருந்து நிவாரணம் தரக்கூடியது என்பதால், பச்சடியாகவோ கூட்டு, பொரியலாகவோ, சாம்பராகவோ செய்து சாப்பிடலாம். சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுத்தூள், சீரகத்தூள், இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து சாப்பிடலாம். வாய்ப்புண், வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரத்தில் இரண்டு […]

மேலும்....