மாசு அடையும் இந்தியா! எச்சரிக்கை!

  இந்தியாவில் 2015ஆம் ஆண்டில் 25 லட்சம் பேர் சுற்றுச்சூழல் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர் என்று 19.10.2017இல் வெளியிடப்பட்ட “லான்செட் மருத்துவ இதழில், செய்தி வெளியாகியுள்ளது. இதில் காற்று மாசுபாட்டினால் 10 இலட்சத்து 80 ஆயிரம் பேரும், தண்ணீர் மாசுபாட்டினால் 64 ஆயிரம் பேரும் வேலைசெய்யும் இடத்தில் ஏற்படும் மாசு பாதிப்பால் 16 ஆயிரம் பேரும், மண் மற்றும் ஈய மாசுபாடு தாக்குதலால் 95,843 பேரும், வீட்டில் ஏற்படுகின்ற காற்று தண்ணீர் மாசுபாட்டினால் 10,50,000 (பத்து லட்சத்து அய்ம்பதாயிரம்) […]

மேலும்....

பிணங்களைப் புதிய முறையில் எரித்தல்

 நீர் எரிப்பு. பொதுவாக மக்கள் இறந்தால் பிணங்களைப் புதைப்பது அல்லது எரிப்பது என்கிற இரண்டு முறைகள்தான் இதுவரை நடைமுறையில் உள்ளன. ஆனால், அமெரிக்காவில் தற்போது 3ஆவது முறையாக ஒருமுறை நடைமுறைக்கு வந்துள்ளது (திவீக்ஷீமீ tஷீ ஷ்ணீtமீக்ஷீ னீமீtலீஷீபீ) நீர் எரிப்பு. இதற்காக ஒரு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரம் மனித உடலிலுள்ள புரதம், கொழுப்பு, குருதி போன்றவற்றை அழித்து காபி நிறத்தில் ஒரு நீர்மமாக மாற்றிவிடுகிறது. தூளாக்கப்பட்ட எலும்புகளும் பல் போன்ற மற்ற உலோகம் போன்ற பொருள்களுமே […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்…

 விற்பனை செய்யப்பட்டவன்பத்துப் பொம்மைகள்தயாரித்தேன்அழும்கடைக்குட்டிக்கு ஒன்றைக்கொடு என்றுபுத்தர் பொம்மை சொன்னது;கேட்கவில்லை நான் பணச் செலவுக்குப்பட்டியல் போட்டேன்பள்ளிக்குப் போகும்பொண்ணுக்குப் புதுச் செருப்புகள் வாங்க அப்பாவுக்குஒரு புதிய குடை வாங்க அம்மா கேட்டதோசைக்கல் வாங்க படுத்துக் கிடக்கும்பாட்டிக்குச்சுமார் வகைப் புடைவைஒன்று வாங்க பட்டியலில்எனக்குஅடுத்துப் பத்துப்பொம்மைகள் செய்யத்தேவையான பொருள்கள்வாங்க எவரிடமும் இதுபற்றிநான் சொல்லவில்லைஎவரும் கேட்கவும் இல்லை ஆனால்எப்படியோ என் மனத்துள்வந்துஎல்லாவற்றையும்பொம்மைகள்குறிப்பெடுத்திருக்கின்றன விடிந்ததும்வெள்ளிக்கிழமைச்சென்னிமலைச் சந்தைக்குப்புறப்பட நான்விழித்தபோதுதான்தெரிந்தது பொம்மைகள் எல்லாம்சேர்ந்துபொம்மைகள் தயாரிக்கும்வெளிநாட்டு நிறுவனத்திற்குஎன்னை விற்றிருந்தன. இருட்டு விற்பனைக்குஇடம் தராத சூரிய தேசம்நடுகற்களின் நடுமார்பு பிளந்துநாடெங்கும் முன்னைய […]

மேலும்....

வாஸ்து மோசடிக்கு எதிராய் வழக்கு!

ஏழையானாலும் பணக்காரர்களானாலும் ஏன் அரசுகளேகூட வீடுகளோ மற்ற கட்டடங்களோ கட்டும்போது வாஸ்து சாஸ்திரம் பார்க்கப்பட்டதா? வாஸ்துப்படி வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கப்படுகிறது. இந்த வாஸ்து என்பவன் யார்? அரன் (சிவன்) அந்தகாசுரன் என்கிற அசுரனோடு போர் புரிகின்றான். போரிலே சிவன் களைத்துப்போய் அரக்கனை வெல்ல இயலாமல் திகைக்க அவருடைய வியர்வை பூமியில் சிந்துகிறது. அந்த வியர்வை பூமியைப் புணர்ந்து ஒரு பெரிய பூதம் பிறக்கிறது. அந்தப் பூதம் அந்தகாசுரனுடைய குருதியைக் குடித்து மல்லாந்து கிடக்கிறது. அதன்மீது தேவர்கள் […]

மேலும்....

வன்முறைக் கலச்சாரம்

அமெரிக்காவில் மனிதம் மறந்த துப்பாக்கிக் கலாச்சாரம் தழைத்தோங்கி வருகிறது. வயது வந்தோரில் 30,00,000 (முப்பது இலட்சம்) பேர் குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கிளை தினமும் கையில் எடுத்துச் செல்கின்றனர். 90,00,000 (தொண்ணூறு லட்சம்) பேர் மாதம் ஒரு முறையாக அப்படி துப்பாக்கிகளை ஏந்திச் செல்கின்றனர். இந்தத் துப்பாக்கிகளை அவர்கள் மறைத்தே எடுத்துச் செல்கின்றனர். துப்பாக்கிகளை பொது இடங்களில் எடுத்துச் செல்வது பொதுமக்களுக்கான பாதுகாப்புக்கும் உடல்நலத்திற்கும் கேடு விளைவிப்பதாய் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும்....