அளவுக்கு மீறிய சுத்தமும் நோய்தான்! – நேயன்

சிலர் யாரேனும் எச்சில் துப்பியிருப்பதைக் கண்டால், அசுத்தமான, அருவருப்பான இடங்களைப் பார்த்தால் மிகவும் பதட்டம் ஆகி விடுவார்கள். வீட்டுக்கு வந்து உடனே குளிப்பார்கள். குளிப்பதற்கே ஒரு மணி நேரம் எடுப்பார்கள். துணிகளைத் துவைத்தால்கூட ஓரிரு முறைக்கு பதிலாக நான்கைந்து முறை அலசுவார்கள். ‘வீட்டில் ஒரு சிறுதூசு, துரும்பு இருந்தால்கூட ரொம்பவும் கோபப்படுவார்கள். சில நேரங்களில் ஒரே நாளில் நான்கைந்து முறை வீட்டை துடைத்து சுத்தம் செய்வார்கள். கையை அடிக்கடி அலம்புவார்கள். குடிக்கும் நீரை உற்று உற்றுப் பார்ப்பார்கள். […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கே    :    சமஸ்கிருதத் திணிப்பை முறியடித்து ஆரிய பார்ப்பன ஆதிக்க முயற்சியை வீழ்த்த திராவிடர் கழகத்தின் செயல்திட்டங்கள் யாவை?— கெ.நா.சாமி, பட்டாபிராம், சென்னை-_72 ப    :    விரைவில் ஆங்காங்கு கண்டன ஆர்ப்பாட்டங்கள் அறிவிப்பு முதல் கட்டமாக வெளிவரும். கே    :    நுழைவுத் தேர்வை எதிர்க்கும் தலைவர்களை அவன் -_ இவன் என்று ‘துக்ளக்’ எழுதும்போது இதுபற்றி தமிழக அரசியல் தலைவர்கள் அமைதி காப்பது சரியா? – அனலரசன், தெ.பரணம். ப    :    மிகவும் வருந்தத்தக்கது; கண்டிக்கத்தக்கது! வன்முறையைத் […]

மேலும்....

சமஸ்கிருத இந்தித் திணிப்பை அகற்ற அனைவரும் போராட வேண்டும்!

இந்தியென்பது பார்ப்பன ஆதிக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட புரட்டு என்பதைத் தவிர அதில் எவ்விதஉண்மைத் தன்மையும் இல்லை என்பதை அறிவுள்ள எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்றே கருதுகின்றோம்.  இந்திய நாட்டில் முப்பத்தைந்தரை கோடி மக்கள் இருந்தாலும் பல பாஷை, பல மதம், பல நாகரிகம், பல நடை உடை பாவனைகளாக இருந்து வருவதை யாவரும் மறுக்கமுடியாது அப்படி இருந்தாலும் மக்களுக்குள் மதத்தின் பேராலும் ஜாதியின் பேராலும் பாஷையின் பேராலும் போட்டிகள் நடந்து வருவதும் மறுக்கக் கூடியவை அல்லவென்றே சொல்லுவோம். இந்த  […]

மேலும்....

பகுத்தறிவாதிகள் படுகொலையில் மதவெறி இராணுவம்!

தபோல்கர் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட வீரேந்திர தாவ்டே 20,000 தீவிர இந்து மதப்பற்றாளர்களைக் கொண்டு தானவ் சேனா (அரக்கர்களை அழிக்கும் படை) உருவாக்கும் திட்டத்தில் இருந்ததாகவும், இதற்காக கருநாடகா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கோவா, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து பல இளைஞர்களை மூளைச்சலவை செய்து தனது படையில் சேருவதற்கு இணங்க வைத்ததாகவும், அவரிடமிருந்து கைப்பற்றிய ஆவணங்கள் கூறுகின்றன.  இவர்களுக்கு சில காவல்துறை அதிகாரிகள் ஆயுதப் பயிற்சி அளிக்க உதவியதாகவும் சி.பி.அய். விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்து  […]

மேலும்....