டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு 5451 பேருக்கு வேலை

தமிழ்நாடு அரசில் குரூப்_4 பணிகளில் 5,451 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி, தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலப் பதிவேடுகள் சார்நிலைப் பணி

மேலும்....

சேலம் இரும்பு ஆலையை தனியாருக்குத் “தாரை வார்ப்பதா’? தட்டிக்கேட்காத தமிழக பா.ஜ.க

– சரவணா இராசேந்திரன்

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் சேலம் இரும்-பாலை கொண்டுவரப்பட்டது. அப்படிப்பட்ட ஆலையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதா?

காமராஜர் முயற்சி

அன்றைய பிரதமரான லால்பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் நீலம் சஞ்சீவ ரெட்டி மத்திய அரசில் உருக்குத் தொழில் அமைச்சராக இருந்தார். தன்னுடைய மாநிலமான ஆந்திரத்திலுள்ள விசாகப்-பட்டினத்தில் இந்த இரும்பாலையை அமைக்க விடாப்பிடியாக முயன்றார் அவர்.

மேலும்....

இப்படியும் ஓர் ஆசிரியர்!

கற்றல், கற்பித்தல் இதைத் தாண்டி பள்ளி ஆசிரியரால் வேறு என்ன செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு, அரசு அதிகாரிகளை உருவாக்க முடியும் எனச் செயல்படுத்திக் காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார் தேனி மாவட்டம், அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் கோ. செந்தில்குமார்.

வழிப்போக்கர்கள் இளைப்பாற உதவும் “திண்ணை’யின் பெயரால், இன்னும் சில நல்ல உள்ளங்களை இணைத்துக் கொண்டு இவர் இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ளார். அரசுப் பள்ளியில் பிளஸ் 2 முடித்த பிறகும், கல்லூரிப் படிப்பை முடித்த பிறகும் திக்குத் தெரியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு உரிய வழி-காட்டுதலை வழங்கி வருகிறார்.

மேலும்....

உலகே வியந்து நோக்கும் ஒப்பிலா சாதனையாளர் உஜிசிக்

பிறந்தபோதே இரு கைகளும் இல்லை, கால்களும் இல்லை. இவரால் வாழ முடியுமா? முடியாது என்றே எவரும் சொல்வர். ஆனால், வாழ்ந்து காட்டியது மட்டுமல்ல, சாதனைகள் பல செய்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

மேலும்....

அரசியல்வாதிகள் படிக்க வேண்டிய அண்ணா பாடம்

– ஒளிமதி

அறிஞர் அண்ணா ஏழ்மையில் எளிமையாய்க் கற்று உயர்ந்து தமிழ்நாட்டின் முதல்வர் ஆனவர். இன்றைய அரசியல் வட்டச் செயலர்கூட அல்ல ஓர் ஊரின் கிளைச் செயலர்-கூட ஆடம்பரமாய், பந்தா காட்டி, ஆட்கள் புடைசூழ ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; அவரவர் திறமைக்கு ஏற்பச் சுருட்டுகின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டின் முதல்வராய் இருந்த அண்ணா எப்படி நடந்துகொண்டார் என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும் பாடமாகப் படிக்க வேண்டும்.

வேண்டியவருக்கு சலுகை காட்டாத நேர்மை!

அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது திரு. சி.வி.இராசகோபால் அவர்கள் தன் மருமகனுக்கு ஏதாவது ஒரு பதவி அளிக்கும்படி அண்ணாவிடம் வேண்டினார்.

மேலும்....