பதிவுகள்

ஈரானில் டிச 20 இல் 6.5 அலகுகளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் அய்வர் குழுவினர் டிச 21 இல் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். அணுசக்தி, மின்சார உற்பத்தி உள்ளிட்ட 30 புதிய ஒப்பந்தங்களில் இந்தியாவும் ரஷ்யாவும் டிச 21 இல் கையெழுத்திட்டுள்ளன. அணு ஆயுதங்களைச் சுமந்து, 350 கி.மீ. தூரம் சென்று தாக்கக்கூடிய பிருத்வி – 2 ஏவுகணைகள் ஒரிசாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து டிச 22 இல் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் […]

மேலும்....

செய்திக்கூடை

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் முதலுதவி மற்றும் ஆம்புலன்ஸ் பிரிவின் தமிழகத் தலைவராக டாக்டர் டி. வடிவேல் முகுந்தன் பொறுப்பேற்றுள்ளார். இந்தியாவில் மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்திற்குப் பதிலாக, வாக்குச் சீட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் தேர்தல் கமிசனிடம் வலியுறுத்தியுள்ளன. பாராளுமன்றத்தை முடக்கியதற்காக மக்களிடம் எதிர்க்கட்சியினர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய செய்தியால் இந்தியா – அமெரிக்க உறவு பாதிக்காது என்று அமெரிக்க […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

தமிழர் பிளவுபட்ட வரலாறு பல்லவர் கல்வெட்டில்… வேதங்களிலும், ஆகமங்களிலும், வித்தைகளிலும் சிறந்த பார்ப்பனர்களுக்கென்று பல சேரிகளும் கட்டப்பட்டன.  இவற்றிற்குப் பார்ப்பனச் சேரிகள் அல்லது அக்கிரகாரங்கள் என்பது பெயர்.  இவற்றில் வதிந்த பார்ப்பன மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அரசர்களும், செல்வர்களும் எண்ணிறந்த மானியங்களைக் கொடுத்தனர்.  இம் மானியங்களையும், பிற பொருள்களையும் கட்டிக் காக்கப் பார்ப்பனர்களுக்கெனத் தனி ஊராண்மைக் கழகங்கள் ஏற்பட்டன.  இவ்வூர்களுக்குக் குடி அல்லது சதுர்வேதிமங்கலம் என்று பெயர்.  பேரூர்களிலும், நகரங்களிலும் கலை வளர்ச்சிக்காகப் பார்ப்பனர்கள் தங்கியிருந்த இடம் பிரம்மபுரி […]

மேலும்....

தமிழரின் தொன்மையைத் தேடி கடல்வழியே ஒரு பயணம்

தமிழர்களின் தொன்மையைத் தேடி நில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  முதன்முறையாக ஒருங்கிணைந்த கடல் ஆய்வு மேற்கொண்டு தமிழர் கடலில் இழந்த நிலம்களையும் மற்றும் உலகெங்கும் பரவிய தகவல்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் பாலசுப்ரமணியம் பி பாசிட்டிவ். கடலைப் பயன்படுத்தி நாகரிகத்தையும் தொழில்வளத்தையும் பெருக்கிய தமிழரின் வரலாற்றை நிகழ்கால ஆதாரங்களோடு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கும் அரிய பணியைச் செய்துவரும் ஒரிசா பாலுவை உண்மை பொங்கல் சிறப்பிதழுக்காகச் சந்தித்தோம். திருச்சி உறையூரில் பிறந்தேன். 1989 இல் பணியின் காரணமாக ஒரிசா சென்றேன். […]

மேலும்....

எனக்குப் பிடித்தக் குறள்

திருக்குறளைப் படிக்காத தமிழர்களே இருக்கமாட்டார்கள். கல்வி, இலக்கியத் துறைகளைச் சார்ந்தவர்கள் பெரும்பாலும் திருக்குறளை நன்றாக அறிந்திருப்பர். ஆனால், பலருக்கு பள்ளி இறுதி வகுப்புவரை மட்டுமே திருக்குறள் படிக்க வாய்ப்பு இருந்திருக்கும். அப்படிப் படித்து முடித்து வெவ்வேறு துறைகளில் முன்னணியிலிருக்கும் சில தமிழர்களிடம் உங்களுக்குப் பிடித்த குறள் எது?  என செல்பேசியிலேயே கேட்டோம். பளிச் பளிச்சென்று தங்களுக்குப் பிடித்த குறளினைச் சொன்னார்கள். அவர்கள் சொன்ன குறட்பாக்களையும், அதற்கான பொருளையும் புலவர் குழந்தை உரையிலிருந்து தந்திருக்கிறோம். ஆண்டோ பீட்டர் (தமிழ்க் […]

மேலும்....