5 ஆண்டுகளில் அடைமழைச் சாதனைகள்
ஃ ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வீதம் மாதம் 20 கிலோ அரிசி; 1 கோடியே 85 இலட்சம் குடும்பங்கள் பயன்.
ஃ மாதந்தோறும் குறைந்த விலையில் பாமாயில் எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு;
ஃ மானிய விலையில் மளிகைப் பொருள்கள் என 50 ரூபாய்க்கு 10 சமையல் பொருள்கள்;
ஃ 22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி;
ஃ விவசாயிகளுக்கான பயிர்க்கடன் வட்டி 2005-2006இல் 9 சதவிகிதம்; 2006-2007 கழக அரசில் 7 சதவிகிதம்; 2007-2008இல் 5 சதவிகிதம்; 2008-2009இல் 4 சதவிகிதம்; 2009-2010இல் பயிர்க்கடன் வட்டி ரத்து; 2006க்குப்பின் இதுவரை 35 லட்சத்து 54 ஆயிரத்து 721 விவசாயிகளுக்கு 8 ஆயிரத்து 477 கோடியே 56 லட்சம் ரூபாய் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
ஃ 2005-2006இல் நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு விலை ரூபாய் 600; 2010-2011இல் சாதா ரக நெல் விலை 1050 ரூபாய்; சன்ன ரக நெல் விலை 1100 ரூபாய்; ஃ மீண்டும் புதுப் பொலிவுடன் 117 உழவர் சந்தைகள்; மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைப்பு;
ஃ பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2006இல் 50 சதவிகித காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாக வழங்கி, ஊக்கப்படுத்தியதால் 2005-2006இல் ஒரு லட்சம் விவசாயிகள் பயனடைந்த நிலையில்; 2009-2010 ஆம் ஆண்டில் 9 லட்சத்து ஓராயிரத்து 643 விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்று பயிர்க் காப்பீடு செய்தனர். கடந்த 4 ஆண்டுகளில் 9 லட்சத்து 643 ஆயிரம் விவசாயிகளுக்கு 974 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது;
ஃ 21 லட்சத்து 23 ஆயிரத்து 491 அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு 1012 கோடியே 78 லட்சத்து 79 ஆயிரத்து 420 ரூபாய் உதவித் தொகை;
ஃ காமராஜர் பிறந்த நாள் – கல்வி வளர்ச்சி நாள் என பள்ளிகளில், கல்வி விழா;
ஃ 2 வயது முதல் 15 வயது வரை உள்ள 73 லட்சம் குழந்தைகள், மாணவ, மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் 5 நாள்களும் முட்டைகள்; வாழைப் பழங்கள்;
ஃ தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 11 லட்சம் மாணவ, மாணவியருக்கு 10, 12ஆம் வகுப்புகளின் அரசுத் தேர்வுக் கட்டணங்களும் ரத்து. ஃ பட்டப்படிப்பு பயிலும் 3 லட்சத்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியரின் படிப்புக் கட்டணங்கள் ரத்து; 2010-2011 முதல் எம்.ஏ., எம்.எஸ்ஸி. வகுப்புகளுக்கும் படிப்புக் கட்டணங்கள் ரத்து.
ஃ படிப்பைத் தொடர இயலாமல் இடையில் நிறுத்திய ஏழை மாணவர்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புகளுக்கேற்ற தொழிற் பயிற்சிகளைச் சமுதாயக் கல்லூரிகள் மூலம் பெற, ஒரு கோடி ரூபாய் செலவில் திறந்த நிலைப் பல்கலைக் கழகம் மூலம் தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை;
ஃ ஆண்டுதோறும் 24 லட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 4 லட்சத்து 35 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்;
ஃ ஏழை மகளிர்க்கு பட்டப்படிப்பு வரை வழங்கப்பட்ட இலவசக் கல்வி, முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டிப்பு.
ஃ தொழிற்கல்விப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து. ஃ சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை ஆகிய இடங்களில் 5 புதிய அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்கள்; ஃ 2006-க்குப்பின், ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர், புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், பென்னாகரம், திருப்பத்தூர் (வேலூர்), வேதாரண்யம் ஆகிய 14 இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்;
ஃ மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்;
ஃ அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லா திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, இராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள்.
ஃ பத்தாம் வகுப்புவரை பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயப் பாடமென சட்டம்;
ஃ நூறாண்டுக் கனவை நனவாக்கிச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைப்பு. ஃ அருந்தமிழ்ச் சான்றோர் 134 பேரின் நூல்கள் நாட்டுடைமை; 9 கோடியே 85 லட்சம் ரூபாய் பரிவுத் தொகை;
மேலும்....