உங்கள் கங்கை நதிக்கரையில்..

இந்தியைத் தாய்மொழியாக்குங்கள்…சமஸ்கிருதத்தை புனித மொழியாக்குங்கள்…மகாபாரதத்தை தேசிய நூலாக்குங்கள்…இராமனை ஒட்டுமொத்தக் கடவுளாக்குங்கள் பேருந்து நிலையம் ரயில் நிலையம் விமான நிலையம் மீதமிருக்கும் எல்லாவற்றையும் தனியார் வசம் ஒப்படையுங்கள்… எங்கள் குடும்ப அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை அனைத்தையும் உங்களிடமே ஒப்படைத்துவிடுகிறோம் தூய்மை இந்தியாவில் ஓடும் உங்கள் கங்கை நதிக்கரையில் நாங்கள் அகோரிகளாகஅலைந்து திரிகிறோம் – கவிஞர் பழநிபாரதி

மேலும்....

முகநூலிலிருந்து…..

இதெல்லாம் தேஷியம்…. //பகவத்கீதையைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் _ -சுஷ்மா சுவராஜ்…//அப்படியே, தேசிய ஆடையாக ‘அரை டவுசரையும்’ தேசிய கோமாளிகளாக ஆர்.எஸ்.எஸ் காரர்களையும் அறிவிச்சாங்கன்னா… மாதம் மும்மாரி மழை பெஞ்சி நாடு வௌங்கிரும்… – கமல் கண்ணா, டிசம்பர் 8, 8.51மணி அப்போ தயிர்ஷோறு தேஷிய ஷோறாகவும் மாவடு ஊறுகாய் தேஷிய ஊறுகாயாவும் அறிவிக்கப்படுமா?– யுவான் சுவாங், டிசம்பர் 8, 9.52 மணி தேஷிய மங்கையாக சுஷ்மாவையும் தேஷிய ஆயுதமாக திரிஷூலத்தையும் தேஷிய நிறமாக காவியையும் […]

மேலும்....

குறுஞ்செய்தி!

12,04,00,000 ஆண்டுகளுக்கு முன்பே…! பகவத் கீதையில் மனித குலத்துக்கு ஏற்ற கருத்துகள் உள்ளதாம். அது மனிதனுக்காக சொல்லப்பட்டதாம். அது மனிதனுக்காகத்தான் சொல்லப்பட்டது என்பதை ஒத்துக் கொள்கிறோம். அதாவது, உயர்ஜாதி மனிதன் கீழ்ஜாதி மனிதனை ஒடுக்க, ”இது கடவுளாலேயே உண்டாக்கப்பட்டது.அதனால் நீ(கீழ் ஜாதிக்காரன். இதற்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும்” என்ற காரணத்திற்காக சொல்லப்பட்டது. அதெல்லாம் இருக்கட்டும், ”யாருமே இல்லாத கடையில யாருக்காக டீ ஆத்துறே?” என்பது போல மனித குலமே தோன்றாத காலத்தில் மனிதனுக்காக சொல்லப்பட்டது என்பதை எப்படி ஏற்றுக் […]

மேலும்....

”கட்டாயம் நான் புத்தந்தான்”

அய்யாவுக்கு புத்தரை மிகவும் பிடிக்கும். ஏனெனில் கௌதம புத்தர் மனிதர்களிடம் நீயே உன் விளக்கு என்றார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற மகாபோதி சங்க மாநாட்டில் உரையாற்றச் சென்றிருந்தபோது ஆசிரியர் அவர்கள் அய்யாவை புத்தர் என்றார். வீரமணி என்ன கருத்தில் சொல்லியிருந்தாலும் நான் புத்தர்தான் என்றார் அய்யா. புத்தரைப் பற்றி அய்யா கூறியது வருமாறு: புத்தியை, அதாவது அறிவை உடையவன் புத்தன். அதேதான் சித்தன் என்பதும்.  அறிவைப் பயன்படுத்தச் சித்தத்தை உறுதியுடன் அடக்கிக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துகிறவன் சித்தன். புத்தியை […]

மேலும்....

’மொழிபெயர்ப்பு” எங்கள் மொழி!

அண்மையில் இணையதளங்களில் அய்ரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற நிகழ்வினைப் பற்றிய காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் இத்தாலி, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட இருபத்தெட்டு நாடுகள் இணைந்த இந்த ஒன்றியம் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு மிகச் சிறந்த சான்றாக உள்ளது. 1951-ல் அய்ந்து நாடுகள் மட்டும் கொண்ட ஒன்றியமாகத் தொடங்கப்பட்ட இந்த மன்றத்தில்  அடுத்தடுத்து ஆஸ்ட்ரியா, பல்கேரியா, சைப்ரஸ் போன்ற பல நாடுகள் இணைந்ததுடன், கடந்த 2013-ஆம் ஆண்டில் குரோஷியாவும் இணைந்ததனால் இருபத்தெட்டு நாடுகள் […]

மேலும்....