சிறுகதை : சாமி யார்?

– அப்சல்

கோவிலுக்குள் நுழையும்போதே, படிக்கட்டுகளில் அந்தப் பையனைப் பார்த்தார் பூசாரி நாகராஜன்.
வழக்கமாக வருபவன்தான். பக்தர்களின் செருப்புகளைப் பாதுகாப்பாக வைத்து, அவர்கள் சாமி கும்பிட்டுவிட்டு வந்ததும் தருவான். அதற்கு அவர்கள் ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ தருவதை மகிழ்ச்சியாக வாங்கிக் கொள்வான். நாள்தோறும் அவனுக்கு அய்ம்பது ரூபாயாவது கிடைக்கும். அதில் அய்ந்து ரூபாய் பிச்சைக்காரர்களுக்குப் போடுவான். கோவில் உண்டியலில் எதுவும் போடமாட்டான்.

மேலும்....

நமது உயிரைக் கொடுத்தாலும் ஜாதியை ஒழிப்பொம்

ஜாதி ஒழிப்பைக் காங்கிரஸ் கட்சி தன்னுடைய இலட்சியமாகக் கொள்ள வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தேன். அந்தச் சந்தர்ப்பத்தில் இராஜ-கோபாலாச்சாரி சொன்னார், நாயக்கரே! (திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில்) இது வீண்வேலை; புத்தனெல்லாம் முயற்சி செய்து தோற்றுப்போனான்; முஸ்லிம் 700 ஆண்டு முயற்சி செய்து தோற்றுப் போனான்; நீங்கள் ஏன் இதைச் செய்ய வேண்டும்? என்றார்.

மேலும்....

லண்டன் தய்மார்கள் நடத்திய வித்தியாசமான தோள்சீலைப் போராட்டம்

உலகைச் சுற்றி….

லண்டன் தய்மார்கள் நடத்திய வித்தியாசமான தோள்சீலைப் போராட்டம்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட ஜாதிப் பெண்கள் தங்கள் மார்புகளை மறைக்கக்கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்துப் போராட்டம் நடத்தி, தங்களின் மேலாடை அணியும் உரிமையைப் பெற்றார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் நடந்த பெண்ணுரிமைக்கான போராட்டம் அது. அதுவே பரவலாக தோள்சீலைப் போராட்டம் என்று அறியப்படுகிறது.

மேலும்....

மார்க் எடுக்காத குழந்தைகள் மக்குகளா?

படிப்பில் ஆர்வம் குறைந்த பள்ளிக் குழந்தைகளுக்கான சிகிச்சைகளும் தீர்வுகளும்

– டாக்டர் ம.அமலி விக்டோரியா மஸ்கரன்ஹஸ் எம்.டி (மனநலம்)

 

ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் உட்கார்ந்து, அவர்களின் வீட்டுப்பாடங்களை முடிப்பதற்கு உதவி செய்வது பொதுவான ஒரு காட்சிதான். பெற்றோரின் எதிர்பார்ப்பு-களுக்கேற்ப பிள்ளைகள் தங்களின் வீட்டுப்-பாடங்களைச் செய்து முடித்தால் அந்த மாலை நேரம் அமைதியானதாகவும் இனிமையான-தாகவும் அமையும். இல்லையென்றால், கீழ்க்காணும் வார்த்தைகளில் ஏதாவது ஒன்றையாவது நாம் கேட்க நேரிடும்.

மேலும்....

கல்வித் திட்டத்தில் காவித் திட்டம்

-கவிஞர் கலி.பூங்குன்றன்

மத்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணியை ஆர்.எஸ்.எஸ். முதன்மையாளர்கள் கிருஷ்ணா கோபால், சோனி, தத்தாத்ரேய முதலானவர்கள் சந்தித்து மூன்று கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

1.    தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்விக் கட்டணங்கள் அதிகமாக இருக்கின்றன.

மேலும்....