இந்தியா முழுமைக்குமான பெரியாரியத்தின் தேவை

கடவுள் இல்லாத சமுதாயத்தை உண்டாக்க வேண்டும் என்று இங்கு சொல்லவில்லை; ஆனால் அறிவுள்ள சமுதாயம் உண்டாக வேண்டும் என்பதை வற்புறுத்துகிறேன் என்று 15.5.1957ல் நடைபெற்ற புத்தர் விழாவில் பேசியவர் பெரியார். அதன் பரிணாமங்கள் தான் கடவுள் மறுப்பு, வைதீக மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணியம், சுயமரியாதை என பெரியாரின் அத்தனை கருத்தியலுக்கும் அடிப்படையாக அமைந்திருந்தது. ஒரு நவீன அறிவியல் ரீதியான சமூகச் சிந்தனையை வார்த்தெடுப்பதன் மூலம் ஜாதியால், வர்ணத்தால் பிளவுபட்டுக் கிடந்த சுரண்டல் சமுதாயத்தை சமதர்ம சமூகமாக மாற்ற இயலும் என்று நம்பினார் பெரியார்.

மேலும்....

ஆட்சிப் பீடத்தில் ஆர்.எஸ்.எஸ்?

ஒளிவு மறைவுத் திட்டங்கள்; திரைமறைவு வேலைகள்; மாறுவேடம் பூண்டு ஏய்த்தல், இரகசியத் திட்டங்கள் என்று வாழ்ந்த, வளர்ந்த ஆர்.எஸ்.எஸ். தற்போது அப்பட்டமாக, பட்டவர்த்தனமாக ஆட்சியைத் தன்பிடியுள் கொண்டுவரத் தொடங்கி, தன் செயல்திட்டங்களை வெளிப்படையாகவே செய்யத் துணிந்துவிட்டது.

மேலும்....

பிறந்தநாள் விண்ணப்பம் – தந்தை பெரியார்

என் 93-ஆம் ஆண்டு பிறந்த நாள் மலருக்கு ஒரு செய்தி வேண்டும் என்று நண்பர் திரு வீரமணி அவர்கள் கேட்டார். சற்றேறக்குறைய 10 ஆண்டுகளாகவே என் பிறந்தநாள் மலருக்குச் சேதி கொடுத்துக் கொண்டுதான் வருகிறேன். முதலாவதாக என் பிறந்த நாள் என்பது என் பிரச்சாரத்திற்கு ஒரு சாதனமாக, ஓர் ஆதாரமாக விளங்குகிறது என்பது ஒரு கல்லுப் போன்ற சேதியாகும்.

மேலும்....

தந்தை பெரியார் 136ஆம் ஆண்டு பிறந்த நாள் சூளுரை

இந்தியா – விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன போதிலும் அந்நாடு – பலவகையான இயற்கை வளங்களைப் பெற்றிருக்கும் ஒரு நாடான போதிலும்கூட, அது வளர வேண்டிய அளவுக்கு வளராமல் மிகவும் கீழான நிலையில் இருப்பதற்கு மூலகாரணம் அங்குள்ள ஜாதி முறைதான். அந்தத் தீமையை ஒழிக்காவிட்டால் அந்த நாடு எளிதில் முன்னேற முடியாது என்று சில மாதங்களுக்குமுன் வெளியிட்ட ஒரு நூலில் (உலகத்தின் பல நாடுகளைப்பற்றிய எனது கண்ணோட்டம் என்ற ஒரு ஆங்கில நூலில்) நவீன சிங்கப்பூரின் தந்தை என்று கருதப்படும் லீக்வான்கியூ அவர்கள் எழுதியுள்ளார்கள்.

மேலும்....