பதிலடி – மத அழைப்பாளரா பெரியார்? – கி.தளபதிராஜ்

மானுட சமூகத்தை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாற்றுவதே தன் வாழ்நாள் பணியாய்க் கொண்டு, கடவுள் மத ஜாதித் தடைகளைத் தகர்த்தெறிந்து சமத்துவ சமுதாயம் படைக்க, தள்ளாத வயதிலும் மூத்திரச்சட்டியைச் சுமந்தபடி சுற்றிச்சுற்றித் தொண்டாற்றிய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் உலகத் தலைவர் பெரியார்!

மேலும்....

எனது பாதை தொடங்கிய இடம் – நடிகர் கமல்ஹாசன்

நீங்க ஒருத்தரோட முரண்பட்டீங்கன்னா அவன் சொல்றது தப்புன்னு நிரூபியுங்க. ஒருத்தரோட கருத்து தப்புன்னு நிரூபிக்க உயிரை எடுக்காதீங்க. பகுத்தறிவுவாதியான நரேந்திர தபேல்கர் மாதிரியான ஆட்கள் கொல்லப்படுவது, இந்தியாவுக்கே பெருத்த அவமானம். இத்தனை குழப்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் நடுவிலே வட இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு தமிழ்நாட்டுக்கு இல்லைங்கிறதுல நான் மிகவும் பெருமைப்படுறேன்.

மேலும்....

சாமியார் கிளப்பிய புருடா நாடு எங்கே போகிறது?

அறிஞர் அண்ணா அவர்கள் தீட்டி சிறப்பான கருத்துகளை உள்ளடக்கிய நல்லதம்பி திரைப்படத்தில் பல்வேறு அரிய தொலைநோக்குச் சிந்தனைகளை கலைவாணர் நகைச்சுவை அரசர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களும், அவரது வாழ்விணையர் டி.ஏ. மதுரமும் சேர்ந்து கூறிடும் அறிவுரைக் காட்சிகள் ஏராளம் உண்டு.

பகுத்தறிவுப் புலவர் உடுமலை நாராயண கவி அவர்களது கருத்தமைந்த பாடல்களும் மேற்கூறிய முற்போக்குப் புரட்சிகர கருத்துகளுக்கு வலிமை சேர்ப்பதாக அமைந்தன.

மேலும்....

அய்யோ கிருஷ்ணா ! அரே கிருஷ்ணா !

– சு.மதிமன்னன்

சென்ற மாதம் இந்தியப் பிரதமர் ரஷ்யாவுக்குப் போனார். இந்தியப் பிரதமர் எனலாமா, பாரதப் பிரதமர் என்று சொல்ல வேண்டுமா? ஏதோ ஒன்று! அவர் போனபோது ரஷ்யப் பிரதமர் புடினைச் சந்தித்தாராம்.. இந்திய நாடு தொடர்பான விசயங்கள், இந்திய_ரஷ்ய உறவுபற்றிய விசயங்கள், உலக நடப்புகள், அவற்றின் தொடர்பாக இரண்டு நாடுகளும் எடுக்கவேண்டிய முயற்சிகள், அவற்றில் ஏற்பட வேண்டிய கூட்டுறவு முயற்சிகள் என்று எவ்வளவோ இருக்கும் பேசுவதற்கும், விவாதிப்பதற்கும், முடிவு எடுப்பதற்கும்!

மேலும்....